ராசி சென்டிமெண்ட்டை கூறி விஜய்யை குழப்பும் ரசிகர்கள்

ராசி சென்டிமெண்ட்டை கூறி விஜய்யை குழப்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay styleஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சென்டிமெண்ட் இருக்கும்.

பெரும்பாலும் தன் படத்தின் ஒரு காட்சியை ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் வைப்பார் ரஜினிகாந்த்.

இதனால் அந்த பிள்ளையாரை ரஜினி பிள்ளையார் என்றே அழைக்கின்றனர்.

அதுபோல் டி.ராஜேந்தர் தான் இயக்கி நடித்த படங்களின் தலைப்பு 9 எழுத்தில் இருக்கும்மாறு வைத்திருப்பார்.

இந்நிலையில் விஜய் சென்டிமெண்ட் பார்ப்போரோ? இல்லையோ அவரது ரசிகர்கள் அவருக்கான சென்டிமெண்ட்டை கண்டு பிடித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் கூறியுள்ளதாவது…

தலைவா, பைரவா, சுறா, ஜில்லா என எ ஆங்கில எழுத்தில் முடியும் டைட்டில்கள் உங்களுக்கு செட்டாகவில்லை.

அதற்கு மாறாக போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்று ஐ (ஆங்கில எழுத்தில்) முடியும்மாறு தலைப்பு வையுங்கள்.

அதான் உங்கள் வெற்றிக்கு ஒர்க் அவுட் என்கிறார்களாம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் ரசிகர்களே…

பூவே உனக்காக படம் எ எழுத்தில் முடிந்தது ஆனால் மாபெரும் வெற்றிப் பெற்றது.

புலி, ஆதி, கீதை படங்கள் ஐ எழுத்தில் முடிந்தது.

ஆனால் இவை தோல்வி அடைந்தது. இது விஜய்க்கோ அவரது ரசிகர்களுக்கோ தெரியாமலா இருக்கும்.

தளபதியே முடிவு செய்யட்டும் பாஸ். ஏதோ எங்களுக்கு தெரிஞ்சதை சொல்றோம் ஜி.

Will title letters Sentiment workout for Vijay

நான் வந்துட்டா மட்டும் ஹிட்டாகிடுமா?.. விவேக்கு நயன்தாரா பதிலடி

நான் வந்துட்டா மட்டும் ஹிட்டாகிடுமா?.. விவேக்கு நயன்தாரா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek nayantharaதன்னுடைய படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்ளாதவர் நயன்தாரா.

இதனை காஷ்மோரா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே கூறினார் விவேக்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நயன்தாரா தற்போது கூறியுள்ளதாவது…

“நான் சில கொள்கைகளை வைத்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்னை ஒப்பந்தம் செய்யும்போதே பட விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.

எல்லா டிவியிலும் படத்தை பற்றி ஒரே விஷயத்தை பேச எனக்கு விருப்பமில்லை.

ஆனால் கட்டாயம் விளம்பரம் செய்தே ஆகவேண்டிய நேரங்களில் என்னால் முடிந்தவரை புரமோட் செய்கிறேன்.

நடிகைகள் விளம்பரம் செய்வதால் மட்டும் ஒரு மோசமான படத்தை வெற்றியடைய வைக்க முடியாது.

படத்தின் கதைதான் அதன் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

நடிகைகளின் கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் பிடித்து கொள்ளலாம் என விவேக் கூறியிருந்தார்.

நானே பல சமயங்களில் சம்பளத்தை குறைத்தும் உள்ளேன். விட்டுக் கொடுத்தும் உள்ளேன்.

விவேக் பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

Nayanthara reaction to Vivek speech about Movie promotions

‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?

‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஎனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, விஐபி 2 மற்றும் பவர் பாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

தற்போது சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படத்தில் நடித்து வரும் இவர், அடுத்து மாரி 2 படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங் மே மாதம் தொடங்கவுள்ளது.

எனவே, இதன் முதற்கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதல் விறுவிறுப்பை கூட்டவிருக்கிறாராம்.

மேலும் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு பதிலாக இதில் ஒரு முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்களாம்.

Maari sequel heroine may change

விவசாயிகளுக்கு உதவ திட்டம் தீட்டிய ஜீவி. பிரகாஷ்

விவசாயிகளுக்கு உதவ திட்டம் தீட்டிய ஜீவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gvprakash

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்ற போதை தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து நேரில் கலந்துக் கொண்டவர் ஜீவி. பிரகாஷ்.

அப்போதே ஒரு புது திட்டத்தை விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

GV Prakash going to launch trust to help Tamilnadu Farmers

சூர்யா செய்த குழப்பத்தால் ஜெயம் ரவியின் அதிரடி முடிவு

சூர்யா செய்த குழப்பத்தால் ஜெயம் ரவியின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviவருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ஜெயம் ரவி நடித்த போகன் ரிலீஸ் ஆகவுள்ளதை தெரிவித்திருந்தோம்.

சூர்யாவின் சிங்கம் படத்தின் மோதலை தவிர்க்கவே, போகன் படம் தள்ளி தள்ளிப் போனது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் போகனை குறிவைத்தே பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்த சி3 படமும் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.

எனவே, மீண்டும் சிங்கத்தால் தியேட்டர் பிரச்சினை ஏற்படும் என தெரிந்த போகன் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா செய்த குழப்பம் இனி தொடராது என்று நம்புவோம்.

Bogan movie release preponed because of Singam 3 release

அமிதாப்-ஜெயா பச்சன் பிரிவுக்கு காரணமான ஐஸ்வர்யா ராய்

அமிதாப்-ஜெயா பச்சன் பிரிவுக்கு காரணமான ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya-rai-amitabbachchan-1அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியருக்கு அபிசேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர்.

பிரபல நடிகரான அபிஷேக் கடந்த 2007ல் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியாருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அமிதாப் பச்சனை பிரிந்து ஜெயா பச்சன் மற்றொரு பங்களாவில் வசித்து வருகிறாராம்.

இதனை அமிதாப்பின் நெருங்கிய நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமர்சிங் கூறியிருக்கிறார்.

Amitabh and Jaya Bachchan living separately says Amar Singh

More Articles
Follows