தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி உலக அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கமலஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருவது தங்களுக்கு அறிந்த ஒன்றுதான்
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து கமல் நன்றி கூறினார்.
அதற்கான விழா சென்னையில் நேற்று மாலை பலமான விருந்துடன் நடைபெற்றது.
அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் வினியோகஸ்தர் உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்…
“கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல், தான் வெளியிட்ட படம் விக்ரம் தான்.
அதற்கு ராஜ்கமல் நிறுவனத்தில் உள்ள மகேந்திரன் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஆகியோர்தான் காரணம்.
டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடிவு செய்தபோது, பலர் எதற்கு இந்த முடிவு என கேட்டனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே நான் பட புரமோஷன் வேலைகளை தொடங்கிட்டேன். அது தற்போது விக்ரமாக அமைந்து இருக்கிறது.
என் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் தன்னை தூக்கிப் பிடித்துள்ளனர்.
என்னை விட அதிக திறமை கொண்ட கலைஞர்கள் காணாமல் போனதை என் கண்முன் கண்டிருக்கிறேன்.
உதயநிதியை பற்றி பேசும் பொழுது..
இவரின் தந்தை நமக்கு எதற்கு இந்த வேலை? நம் வேலையை பார்ப்போம் என கூறியதாக கேள்விபட்டேன். ஆனால் உதயநிதி இந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற நேர்மையாளர்கள் இருக்கும் பொழுது, பலர் பிழைப்பார்கள்.
இறுதியாக திரையரங்க உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் மற்றும் மக்களுக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது…
“டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்கும் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது.இப்போதே 75 கோடி ஷேர் கொடுத்துள்ளது.
விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இண்டர்வல் எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன்.
இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை” என்றார்.
Why this work for us .. Stalin who condemned Udayanidhi;