தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 5 படங்கள் மோதுகின்றன.
டிசம்பர் 21ல் தனுஷின் மாரி2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்னுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தேதியில் மோதாமல் பட ரிலீஸ் தேதியை மாற்ற சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.
ஆனால் அந்த 5 பட தயாரிப்பாளர்களும் மறுப்பு தெரிவிக்க வேறு வழியில்லாமல் எப்படியோ நீங்களே தியேட்டர் எண்ணிக்களை முடிவு செய்து ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என அறிவித்துவிட்டார்.
இந்த பிரச்சினைக்கு மட்டும் முடிவு சொல்லாமல் அடுத்த வருடம் வரவுள்ள பொங்கல் படங்களுக்கும் இப்போதே முடிவை அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.
இரண்டும் ஒரே நேரத்தில் மோதினால் வசூல் பாதிக்கப்படும் என்பதை அறிந்தும் இரு பட தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் உறுதியாகவுள்ளனர்.
இப்போது வந்துள்ள 5 பட ரிலீஸ் பிரச்சினை நிச்சயம் பொங்கல் சமயத்திலும் 2 படங்களுக்கும் வர வாய்ப்புள்ளது.
சின்ன நடிகர்கள் பிரச்சினையே சமாளிக்க முடியாது. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் நிச்சயம் தீர்வே சொல்ல முடியாது என்பதால் அவர்கள் இஷ்டப்படியே ரிலீஸ் செய்துக் கொள்ள சொல்லிவிட்டார் விஷால்.