தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.
கஜா தாக்கிய வேதாரண்யம், கோடியக்கரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் கஜா துயரத்தில் இருந்து நீங்கவில்லை.
குடிக்க தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
திரையுலக பிரபலங்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் நிவாரண நிதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்க விஷால் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து விஷால் கூறியதாவது…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கார்காவயல் ஊராட்சி, கார்காவயல் கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன். அங்கு 450 குடும்பங்கள் உள்ளன. வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித்தந்து சூரியசக்தி மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.
தத்தெடுக்கும் கார்காவயல் கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என விஷால் உறுதியுடன் கூறியுள்ளார்.
Vishal adopt village from Pattukottai which affected by Gaja Cyclone