தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ என்ற படத்தை ‘நேர் கொண்ட பார்வை’ என்ற பெயரில் இயக்கி வருகின்றனர்.
அஜித், வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க வினோத் இயக்கி வருகிறார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பெரும்பாலும் இப்பட சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் நடைபெற்றது.
கிட்டதட்ட 42 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்களாம்.
எனவே அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இவ்வளவு சீக்கிரம் அஜித் படத்தை வினோத் முடித்துள்ளதால் தல ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம்.
Vinoth completed Ajiths Nerkonda Paarvai shoot within 42 days