தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
களவாணி, வாகை சூடவா தொடங்கி மாப்ள சிங்கம் வரை பெரும்பாலும் கிராமத்து நாயகனாகவே வந்தார் விமல்.
இதனால் இவருக்கு வேறு கெட்டப்புகள் செட் ஆகாது என பரவலாக ஒரு பேச்சு கோலிவுட்டில் எழுந்தது.
எனவே, டேமேஜ் ஆன இமேஜ்ஜை உயர்த்திக் காட்ட முடிவெடுத்துள்ளாராம் விமல்.
எனவே, தனது பாதையை மாற்றி வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.
நவ்தீப் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் விமல்.
இந்த கேரக்டரில் அஞ்சான் படத்தில் உள்ள ராஜீ பாய் சூர்யாவை போன்று வேஷம் போடவுள்ளாராம்.
அதாவது அதுபோன்ற ஹேர் ஸ்டைல் மற்றும் காதில் கடுக்கன் அணிந்து நடிக்கிறாராம்.