தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் அழுக்கு பையனாக அறிமுகமானார் கார்த்தி.
இதன் பிறகு வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அவரை ஒரு அழுக்கு நாயகனாகவே காட்டியிருந்தார் செல்வராகவன்.
ஆனால் இந்த இரு படங்களுக்குப் பிறகு கார்த்திகை முற்றிலும் ஒரு மாடர்ன் லுக்கில் கல்லூரி பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக ‘பையா’ படத்தில் மாற்றி இருந்தார் லிங்குசாமி. 2010-ல் இந்த படம் வெளியானது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு ‘பையா’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு கார்த்தி்ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் ‘பையா 2’ பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
karthi join director lingusamy’s paiyaa 2