தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விக்ரம் பேசும்போது…
“இந்த படத்திற்காக இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு சென்றோம். சோழர் பெருமையை எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்து கூறியுள்ளோம்.
‘பொன்னியின் செல்வன்’ என்பது மட்டுமே அவர்களுக்கு புரியாத பெயராக இருந்தது. இப்போது பொன்னியின் செல்வன் என்ற பெயர் அவர்களுக்கு புரிந்து விட்டது.
இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக இந்த படத்திற்கு பெரியோர்களின் ஆதரவும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
எனவே அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்வது அவர்களின் பிள்ளைகளின் கடமை. இளைஞர்களின் கடமை. அவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை” என பேசினார் விக்ரம்.
ஜெயம் ரவி பேசும்போது…
“இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளோம். இதில் எந்த ஊர் எனக்கு பிடித்த ஊர் சிறந்த ஊர் என்று கூற முடியாது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துமே சிறந்த ஊர் தான். ஏனென்றால் இது நம் நாடு நம் இந்தியா. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இந்த பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என பேசினார்.
சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Vikram appeals to take elders safely to ‘PS1’ movie