சொன்னதை செய்யாத விஜய்; சர்கார் மீது சரமாரி தாக்கு..!

சொன்னதை செய்யாத விஜய்; சர்கார் மீது சரமாரி தாக்கு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijay*சர்கார்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது.

ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

“சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.

எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார்.

“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என்னுடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தேன்.

அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று.

அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார்.

இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறினார் விஜய்.

ஆனால் இப்போது சர்கார் பட போஸ்டரில் அவர் புகைப்பிடிப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

பெரியார் குத்து பெயரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிம்பு வாய்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

periyar kutthu songரமேஷ் தமிழ்மணி இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ளது ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பம்.

இந்த பாடலை சிம்பு தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.

இந்த பாடலின் முன்னோட்டமாக 45 நொடிகள் நிறைந்த ஆல்பத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

இப்பாடலின் வரிகள் சமீப கால அரசியலை தோலுரிக்கும்படியாக அமைந்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.

முழு பாடலையும் கேட்க ஆவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மேலாக அரசியல்வாதிகள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இப்பாடல் வெளிவர உள்ளது.

தீபன் பூபதி இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

சூர்யா-மோகன்லால் கூட்டணியில் சமுத்திரக்கனி இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 37கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்க உள்ளார்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில்,
இப்படத்தின் மற்ற இரண்டு கேரக்டர்களில் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

நடிக்க வந்து ஸ்டண்ட் மாஸ்டராகி பிறகு வில்லனான ஸ்டண்ட் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stun sivaபல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன்ட் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது.

ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.

ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தமிழ்ப்படம் தலைப்பு மாற்றம்

ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தமிழ்ப்படம் தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thamizh padam 2தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்தனர் நடிகர் சிவா மற்றும் சிஎஸ். அமுதன் கூட்டணி.

தற்போது இதன் 2ஆம் பாகத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பிலேயே தமிழ்ப்படம் 2.0 என்று வைத்து ரஜினியின் 2.0 படத்தையும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

இதனிடையில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ‘தமிழ்ப்படம் 2.0’ திரைப்படத்தின் டைட்டில் ‘தமிழ்ப்படம் 2’ என்று மாற்றியுள்ளனர்.

புள்ளிக்கு பின்னர் வரும் ஜீரோவுக்கு மதிப்பில்லை என்ற கணித கோட்பாட்டின்படி அந்த ஜீரோவை படத்தின் டைட்டில் இருந்து தூக்கிவிட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தி திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்களும் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டிலும் நடித்துள்ளனர்.

அமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது

அமீர்கான் நடிப்பில் 3 இடியட்ஸ் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 idiots stillsராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸான ஹிந்திப் படம் ‘3 இடியட்ஸ்’.

அமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்தார்.

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாகத் தெரிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி.

கதையாசிரியர் அபிஜித்துடன் சேர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதத் தொடங்கிவிட்டாராம் அவர்.

தற்போது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான ‘சஞ்சு’ படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி.

இந்த படத்தை தொடர்ந்து ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப் போகிறாராம்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டுதான் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார்.

ஏற்கெனவே இதன் 2ஆம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows