தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளியீட்டிற்கு முன்பே கதை திருட்டில் சிக்கியது.
இதனால் டைரக்டர் முருகதாஸ் கோர்ட் வரை சென்றார்.
அதன்பின்னர் தற்போது சர்காரில் உள்ள காட்சிகளால் அதிகமுவினர் எதிர்ப்பு தெரிவிக்க சில தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன
தற்போது எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவிலும் வெளியானது.
தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இதன் டப்பிங் உரிமை விற்கப்பட்டது.
தற்போது ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த வசூலை ஈட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு போட்டியாக வெளியான தெலுங்கு படமான ‘அதுகோ படமும் ஹிந்திப் படமான ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போய்விட்டது.
உலகம் முழுவதும் 4 நாட்களில் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Vijays Sarkar making good collection in South India