தளபதி விஜய்யின் சர்கார் பேச்சு… சறுக்கல்..? சக்ஸஸ்..?

தளபதி விஜய்யின் சர்கார் பேச்சு… சறுக்கல்..? சக்ஸஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays political speech at Sarkar Audio launch news updatesஅண்மைக் காலமாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிடுகிறது.

அதுவும் விஜய் படங்கள் இது பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகிறது.

தலைவா, கத்தி உள்ளிட்ட படங்களும் இந்த பிரச்சினைகளை சந்தித்தது.

கடந்தாண்டு வெளியான மெர்சல் திரைப்படமும் ஜிஎஸ்டி உள்ளிட்ட அரசியல் வசனங்களால் பெரும் சோதனைகளை சந்தித்தது.

ஆனால் அந்த பிரச்சினைகளே அப்படத்திற்கு விளம்பரமாக அமைய இந்தியா முழுக்க பிரபலமானார் விஜய்.

இந்நிலையில் அக். 2ஆம் தேதி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பேச்சு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரசாங்கம், ஊழல், முதல்வர் நல்லாட்சி, அறிவுரை என பலவற்றையும் பேசினார் விஜய்.

இதில் அரசியல் மெர்சலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இது அரசியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்த பேச்சு சர்கார் ரிலீஸில் சறுக்கலை ஏற்படுத்துமா? அல்லது மெர்சல் போல பெரிய சக்ஸ்ஸை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Vijays political speech at Sarkar Audio launch news updates

கிராமப்புற ஆசிரியரை 3 வருடத்திற்கு தத்தெடுத்த ஜிவி. பிரகாஷ்

கிராமப்புற ஆசிரியரை 3 வருடத்திற்கு தத்தெடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashs noble gesture for education He adopt a Govt teacher for 3 yearsநடிகர், இசையமைப்பாளர் என பிஸியாக வலம் வந்தாலும் தமிழ் சமுதாயத்திற்காக எப்போதும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது குரல் கொடுப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க நிதியளித்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாய்மொழியில் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், விழுப்புரம் மரக்காணம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.

மேலும், ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால், கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும் என தெரிவித்துள்ளார்.

எனவே நல்ல உள்ளங்கள் தாமாகவே முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

GV Prakashs noble gesture for education He adopt a Govt teacher for 3 years

சீறும் புலிகள் படத்தில் விடுதலைப்புலி பிரபாகரனாக பாபி சிம்ஹா

சீறும் புலிகள் படத்தில் விடுதலைப்புலி பிரபாகரனாக பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In LTTE Chief Prabhakaran Biopic Bobby Simha Will Be Castedஜிகர்தண்டா படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து தேசிய விருதை வென்றவர் பாபி சிம்ஹா.

அதனையடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அண்மையில் சாமி2 படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்துடன் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபாகரனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை லைட்மேன், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

இவர், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய நீலம் படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

In LTTE Chief Prabhakaran Biopic Bobby Simha Will Be Casted

ரஜினி என்ற புத்தகத்தை படிக்க முடியாது; பெருமைப்படுகிறேன்.. : மணிகண்ட ஆச்சாரி

ரஜினி என்ற புத்தகத்தை படிக்க முடியாது; பெருமைப்படுகிறேன்.. : மணிகண்ட ஆச்சாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manikandan Achari shares his working experience with Rajini in Pettaரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் பேட்ட.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் பாலிவுட்டை சேர்ந்த நவாசுதீன் சித்திக் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த மணிகண்ட ஆச்சாரி என்பவரும் நடித்து வருகிறார்.

அண்மையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டிப்பாடம் என்ற படத்தில் ரசிகர்களின் முழு கவனம் ஈர்த்தவர் மணிகண்ட ஆச்சாரி.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார் அவர்.

“ரஜினி சாரிடம் நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்கள் மனிதநேயமும் நேரம் தவறாமையும் தான். இப்போதும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்போடுதான் இருக்கிறார்.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் இயக்குனரிடம் சந்தேகங்களை கேட்டு அவர்களை சொல்வதை அப்படியே செய்கிறார்.

அவர் மிகப்பெரிய புத்தகம். என்னால் அந்த முழு புத்தகத்தையும் படிக்கமுடியாது. அவருடன் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் மணிகண்ட ஆச்சாரி.

Manikandan Achari shares his working experience with Rajini in Petta

மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

மக்கள் மனமேறிய பரியேறும் பெருமாள்.; காலா இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்திய கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan with pa ranjith“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள்” பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரி செல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “தனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

கன்னட சூப்பர் ஹிட்டான *நிஷ்யப்டா2* படம் தமிழில் *மஞ்சக்காடு* பெயரில் ரீமேக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjakkadu krishnaரீமேக் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நிஷ்யப்டா 2’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

நிஷ்யப்டா 2’ படம் தமிழில் ‘மஞ்சக்காடு’ என்ற பெயரில் உருவாக இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை ரவிபாபு என்பவரிடம் முறைப்படி பெற்று, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பி.கிருஷ்ணா இயக்க இருக்கிறார்.

அலைன்ஸ் பிக்சர்ஸ் சார்பில் உருவாக இருக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதாநாயகன், நாயகி, பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் படப்பிடிப்பு, டீசர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

More Articles
Follows