தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விளையாட்டு போட்டிகளில் கேப்டன் என்ற வார்த்தை கேட்டு பார்த்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் கேப்டனாக வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த்.
பின்னர் தன் கவனத்தை அரசியல் பக்கம் திருப்பியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2015ம் ஆண்டில் சகாப்தம் படத்தில் நடித்தார். இதில் விஜயகாந்தும் நடித்திருத்தார்.
இதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சண்முக பாண்டியனுக்கு சொல்லிக் கொள்கிற அளவுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் சண்முக பாண்டியன்.
இதை சசிகுமார் இயக்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார்.
இந்த தொடர் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி உருவாகவுள்து.
சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றப்பரம்பரை பட கதையை பாரதிராஜா இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது வெறும் பேச்சுடன் நிறைவானது.
ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியவர் சசிகுமார். அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்க முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijaykanth’s son joins Sasikumar in ‘Kuttrapparamparai’