தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20 வருடங்களுக்கு முன்பே பிரபல கதாசிரியர் ரத்தினக்குமார் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கவிருந்தார் பாரதிராஜா.
இது இயக்குனர் இமயத்தின் கனவுப்படம் என்றே கூறப்படுகிறது.
அப்போது சிவாஜி கணேசனை அதில் நடிக்க வைக்க விரும்பினாராம்.
ஆனால் பல பிரச்னைகளால் அந்த படம் தொடங்கப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை கதையை கையில் எடுத்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் பிரச்னை உருவானது.
இதனால் பாலா இந்த கதையை கைவிட்டார்.
அதன்பின்னர் பாரதிராஜா நடிப்பதில் பிஸியாகிவிட்டார். பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குற்றப்பரம்பரை கதையை திரைப்படமாக்க விரும்புகிறாராம்.
இதில் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Bharathirajas dream movie Kutra Parambarai is connected with Vijay Sethupathy