விஜய்-அஜித்தை இணைத்து ஒரு படம்.. நாகசைதன்யாவுடன் ஒரு படம்.; வெங்கட்பிரபுவின் சூப்பர் ப்ளான்..

விஜய்-அஜித்தை இணைத்து ஒரு படம்.. நாகசைதன்யாவுடன் ஒரு படம்.; வெங்கட்பிரபுவின் சூப்பர் ப்ளான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த மாநாடு மற்றும் அசோக் செல்வன் நடித்த மன்மதலீலை ஆகிய இரு வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இவர் விரைவில் நாகார்ஜீனா மகன் நாகசைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு ஒரு நிகழ்ச்சயில் கலந்துக் கொண்டபோது அவரிடம் ‘மங்காத்தா-2’ படம் இயக்குவது குறித்து கேட்கப்பட்டுள்ளது.

மங்காத்தா 2 படத்தின் கதை ரெடியாக உள்ளது. இதில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் இணைத்து இயக்க ஆசைப்படுகிறாராம்.

அவர்கள் இணைந்து நடிக்க ஓகே சொன்னால் விரைவில் மங்காத்தா 2 படம் உருவாகும் எனவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

Read also – அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்

Venkat Prabhu wants to direct both Ajith and Vijay in a single film

மம்மூட்டியின் ‘சிபிஐ-5’ மே 1ல் ரிலீஸ்..; 35 ஆண்டுகளில் 5 பாகங்கள் ஒரு பார்வை..

மம்மூட்டியின் ‘சிபிஐ-5’ மே 1ல் ரிலீஸ்..; 35 ஆண்டுகளில் 5 பாகங்கள் ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட்டில் சில படங்கள் பல பாகங்களாக வந்துள்ளன. இந்திய சினிமாவில் ஓரிரு படங்களே 3 பாகங்களாக வந்துள்ளன.

ஆனால் மலையாளத்தில் ஒரு சினிமா 4 பாகங்களாக வந்துள்ளன. தற்போது அதன் 5ஆம் பாகம் ரிலீசாகிறது. அதுதான் ‘CBI 5 THE BRAIN’

நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ல் இந்த படம் ரிலீசாகிறது.

மலையாளத்தின் சிறந்த சீக்குவல் சினிமா என சிபிஐ படங்களை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.

இதில் மம்மூட்டி சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மம்மூட்டி செய்யும் விசாரணை முறை பாணி அப்போதே பாப்புலர் ஆனது.

1988ஆம் ஆண்டில்தான் இதன் முதல் பாகம் ‘சிபிஐ டைரிக் குறிப்பு’ என்ற பெயரில் வெளியானது.

திரைக்கதை ஆசிரியர் எஸ்.என்.சுவாமி கதை, திரைக்கதை எழுத இப்படத்தை கே.மது இயக்கியிருந்தார்.

பிரபலமாக இருந்த சிபிஐ வழக்கு விசாரணைகளை மையப்படுத்தியே இதன் பாகங்கள் உருவானது.

இதில் மம்மூட்டி உடன் முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, லிஸ்சி, சுகுமாரன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெகதி ஸ்ரீகுமாரும் முகேஷும் உதவி விசாரணை அதிகாரிகளாக நடித்திருப்பார்கள்.

இதன் இரண்டாம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரில் 1989-ல் வெளியானது. ஒரு நடிகையின் மரணத்தை விசாரிப்பதாக இந்த படம் இருக்கும்.

இதில் நடிகை பார்வதி ஜெயராம் நடித்திருந்தார்.

இந்தப் படமும் வெற்றி பெறவே இதன் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தன.

ஒவ்வொரு படத்திலும் களங்கள் வெவ்வேறாக இருக்கும்.

இதன் பின்னர் 2004-ல் ‘சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரில் 3ம் பாகம் வெளியானது. சிபிஐ கூட்டணியுடன் இதில் நவ்யா நாயர் நடித்திருந்தார்.

இதனையடுத்து இதன் 4ஆம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ 2005ல் வெளியானது.

இதில் சம்ருதா சுனில், கோபிகா நடித்திருந்தனர்.

இந்த சிபிஐ பாகங்கள் அனைத்தையும் கே மது இயக்கியிருந்தார்.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இதன் சிபிஐ 5 பாகம் வெளியாகிறது.

விபத்து ஏற்பட்டு நினைவில்லாமல் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருந்த கெஜதி ஸ்ரீகுமார் இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார்.

நாளை மே 1ல் ரிலீசாகவுள்ள CBI 5 THE BRAIN படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

CBI 5 The Brain OPENS FROM MAY 1 WORLDWIDE

கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மங்காத்தா முதல் வலிமை வரை.. நரைத்த தலை முடி, நரைத்த தாடி என வலம் வருகிறார் நடிகர் அஜித்.

இதனால் அவரது படங்களிலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எனவே நாயகிகளுக்கும் பெரிதாக வேலை இல்லாமல் போய்விடுகிறது.

வேதாளம், வீரம் படங்களில் ஆக்சன் காட்சிகளே பலமாக அமைந்தன.

இடையில் வந்த விஸ்வாசம் படத்தில் நாயகியை விட தந்தை மகள் பாசமே பெரிதாக பேசப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தில் பெயரளவில் மட்டுமே நாயகி இருந்தார். வலிமை படத்தில் அது கூட இல்லை.

தற்போது அஜித் 50 வயதை நெருங்கிவிட்டார். இனி அவர் இளம் நாயகர்கள் போல நடிக்க விரும்பவில்லையாம். அதன்படி நாயகியுடன் ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டாம் என்கிறாராம்.

ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட எவ்வளவு பெரிய சீனியர் நடிகர்களாக இருந்தாலும் நாயகியுடன் சின்ன சின்ன ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டும் என்பார்கள்.

அப்படியிருக்கையில் டூயட் வேண்டாம் என அஜித் புது ரூட் போட விரும்புகிறாரோ என்னவோ..? அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

Will fans accept Ajith’s new decision ?

EXCLUSIVE பான் இந்தியா ஸ்டார் ஆசையெல்லாம் தேவையா விஜய்-அஜித்..? அப்படின்னா இதை செய்யலாமே.!

EXCLUSIVE பான் இந்தியா ஸ்டார் ஆசையெல்லாம் தேவையா விஜய்-அஜித்..? அப்படின்னா இதை செய்யலாமே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சினிமாவில் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வரும் வார்த்தை பான் இந்தியா படங்கள் என்பதே.

அதன்படி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

அப்போதுதான் நாமும் இந்தியா முழுக்க தெரிந்த நடிகர்களாக உயர்வோம் என நினைக்கின்றனர்.

அது தப்பில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் 1% கூட அவர்கள் செயல்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் படங்களுக்கு இந்தியா முழுக்க மார்கெட் உள்ளது. அவர்களது படங்கள் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலீசாகின்றன.

அதற்கேற்ப ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பல மாநிலங்களுக்கு சென்று தங்கள் படங்களை புரமோசன் செய்கின்றனர். எனவே அந்தந்த மாநில ரசிகர்களுக்கும் அவர்களது படங்களை பார்க்க ஆர்வம் வருகிறது.

ஆனால் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் 4 மொழிகளில் வெளியானது. விஜய்யின் பீஸ்ட் படமும் 4 மொழிகளில் வெளியானது. இவர்கள் இருவரும் தங்கள் பட தொடர்பான எந்த புரமோசன் நிகழ்ச்சியிலும் ஈடுபடவில்லை.

விஜய்யாவது சன் டிவியில் பேட்டி கொடுத்தார். ஆனால் அஜித் தன் பட பூஜைக்கு கூட வரமாட்டார்.

அஜித்தும் விஜய்யும் சரி.. தமிழகளவில் மட்டுமே படு பிரபலம். அண்டை மாநிலமான ஆந்திரா தெலுங்கானாவில் சிறிய அளவில் மார்கெட்டை பிடித்து வருகின்றனர்.

விஜய்க்கு கேரளாவில் மார்கெட் உள்ளது. அஜித்திற்கு அந்தளவுக்கு கூட இல்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தங்கள் பட புரமோசன் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்தால் அந்த படம் எப்படி வியாபாரமாகும். இதுபற்றி எல்லாம் சிந்திக்காமல் பான் இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என நினைக்கலாமா?

வலிமை மற்றும் பீஸ்ட் ஆகிய இரு படங்களும் நெகட்டிவ் விமர்சனங்களால் தோல்வியை தழுவியுள்ளது.

சமீபத்திய பான் இந்தியா படங்களான புஷ்பா, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களை எடுத்துக் கொண்டால்.. அந்த படக்குழுவினர் இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்கு சென்று தங்கள் படத்தை புரமோட் செய்துள்ளனர்.

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்தது. எங்கும் புஷ்பா ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை பற்றிய பேச்சாக எதிரொலித்து. எனவே படத்திற்கும் கட்டுக் கடங்காத கூட்டம் தியேட்டர்களில் கூடியது.

இந்த 3 படங்களும் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டையாடியது.

ஆனால் விஜய் அஜித் எந்தவொரு நிகழ்விலும் கலந்துக் கொள்ளாமல் பான் இந்தியா ஸ்டாராக ஆக வேண்டும் என நினைப்பது எப்படி நியாயமாகும்.?

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

Why Vijay Ajith films losing the pan-India race ?

எம்ஜிஆர் ஜெயலலிதா வடிவேலுவுடன் நடித்த ரங்கம்மா பாட்டி காலமானார்

எம்ஜிஆர் ஜெயலலிதா வடிவேலுவுடன் நடித்த ரங்கம்மா பாட்டி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி.

இவர் எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் நடிகை ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பது இவர்தானாம்.

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் வடிவேலு உடன் பாட்டியாக நடித்திருந்தார்.

இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்துள்ளார்.

எனவே வறுமை இவரே வாட்டவே சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்புவிற்று வந்துள்ளார்.

தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது சில நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் உதவி செய்தனர்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாகவும் வறுமை காரணமாகவும் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்துக்கு சென்றுவிட்டார்.

அங்குதான் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார்.

Veteran Actress Rangamma passes away

வெற்றிமாறன் – லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’ பட அப்டேட்

வெற்றிமாறன் – லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை தன் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ். கதிரேசன்.

இதில் ‘ஆடுகளம்’ படம் ஆறு தேசிய விருதுகளை வென்றது.

தன் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்து இருக்கிறார் வெற்றிமாறன்.

தற்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ‘அதிகாரம்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ். கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை,வசனம் எழுத தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பான் இந்தியா படமாக இப்படம் தயாராகவுள்ளது.

‘அதிகாரம்’ படத்தை இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘எதிர் நீச்சல்’, ’காக்கி சட்டை’, ’கொடி’, ’பட்டாசு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், எஸ். கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.

Vetrimaaran – Raghava Lawrence joins for Adhigaaram

More Articles
Follows