தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடித்த மாநாடு மற்றும் அசோக் செல்வன் நடித்த மன்மதலீலை ஆகிய இரு வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இவர் விரைவில் நாகார்ஜீனா மகன் நாகசைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட்பிரபு ஒரு நிகழ்ச்சயில் கலந்துக் கொண்டபோது அவரிடம் ‘மங்காத்தா-2’ படம் இயக்குவது குறித்து கேட்கப்பட்டுள்ளது.
மங்காத்தா 2 படத்தின் கதை ரெடியாக உள்ளது. இதில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் இணைத்து இயக்க ஆசைப்படுகிறாராம்.
அவர்கள் இணைந்து நடிக்க ஓகே சொன்னால் விரைவில் மங்காத்தா 2 படம் உருவாகும் எனவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
Read also – அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்
Venkat Prabhu wants to direct both Ajith and Vijay in a single film