தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
இந்த படம் தமிழ் & தெலுங்கில் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது. பரத்சங்கர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க முக்கிய வேடங்களில் அதிதி, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அப்போது அந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்ப்பதாக ஒரு காட்சி இருக்கும். அவர் ஏதோ ஒரு குரலை கேட்பதாக அந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தற்போது அந்த குரல் யாருடையது என்பது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த குரலுக்கு சொந்தக்கார விஜய்சேதுபதி.
மாவீரனுக்கு குரல் கொடுத்த மக்கள் செல்வனுக்கு நன்றி என சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த குரலை கொடுக்க ரஜினி கமல் சிம்பு உள்ளிட்டோரை படக்குழு அணுகியதாகவும் அவர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் ஏற்கனவே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathi voice over in Maaveeran
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
– Sivakarthikeyan
#Maaveeran
#VeerameJeyam
#MaaveeranFromJuly14th https://t.co/Nobb7HOIhC