தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற அக். 25ல் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வரவேற்க வித்தியாசமான விஷயங்களை செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்துவிட்டதால் பேனர்களை தவிர்த்து வருகின்றனர். எனவே நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளி உட்பட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கொடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் நல்ல விஷயமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் வித்தியாசமான வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறையில் இருக்கும் பிரசன்ன மாரியம்மன் கோவிலில், மண் சோறு சாப்பிட்டனர்.
மற்றொரு பகுதியில் பிகில் வெற்றி பெற வேண்டி கிரேன்களில் பறவை காவடி எடுத்துள்ளனர்.
என்னப்பா.. இந்த விஜய் பேன்ஸ் அப்படியும் பண்றாங்க இப்படியும் பண்றாங்க என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Vijay fans doing different things for the success of Bigil