அழுத்தமான பவர்புல் கேரக்டருக்கு விஜய்ஆண்டனிதான் கரெக்ட்: சீனிவாசன்

அழுத்தமான பவர்புல் கேரக்டருக்கு விஜய்ஆண்டனிதான் கரெக்ட்: சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay antony will be right person for powerful weight character says Annadurai director Srinivasanவிஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது என்கிறார் இயக்குனர்.

இப்படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது…

இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி. வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான கமெர்சியல் படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன்.

அண்ணாதுரை கதையை விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும்.

அண்ணாதுரை படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. அண்ணாதுரை தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும்.

வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30 ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்” என்றார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சக்திவேல் பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.

Vijay antony will be right person for powerful weight character says Annadurai director Srinivasan

annadurai movie set

ரசிகரை அடிக்கவில்லை; அது வேற காரணம்.. கமல் தரப்பு விளக்கம்

ரசிகரை அடிக்கவில்லை; அது வேற காரணம்.. கமல் தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Clarification news Whether Kamalhassan beat his fanதன்னை பார்க்க ஓடி வந்த ரசிகரை நடிகர் கமல்ஹாசன் தள்ளிவிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கமல் ஏன் இப்படி செய்தார்? என நடுநிலையாளர்களே வருத்தப்படும் அளவுக்கு இணையங்களில் இது பேச்சானது.

இந்நிலையில் கமல் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ரசிகர் கமல் அவர்களின் காலில் விழ ஓடிவந்தார். காலில் விழும் கலாச்சாரத்தை கமல் ஒருபோதும் விரும்புவதில்லை.

எனவேதான் அந்த ரசிகரை கமல் தள்ளிப் போக சொன்னார்.

ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளனர்.

Clarification news Whether Kamalhassan beat his fan

kamal slams

விஐபி பட ஸ்டைலில் கமல்.ஜி இயக்கத்தில் உருவாகும் சரமாரி

விஐபி பட ஸ்டைலில் கமல்.ஜி இயக்கத்தில் உருவாகும் சரமாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saramaari movie based on Engineering studentsதனுஷ் தயாரித்து நடித்த விஐபி மற்றும் விஐபி2 ஆகிய இரண்டு படங்களும் என்ஜினியரிங் மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கபட்டது.

தற்போது அதே போன்று என்ஜினியரிங் மாணவர்களை மையப்படுத்தி சரமாரி என்ற படம் உருவாகியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’.

நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’.

அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் நாயகர்களாக நடிக்கின்றனர்.

கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் பாயும்புலி, அறம்சினம், வேலைக்காரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா மற்றும் தயாரிப்பாளர் நெல்லை ஜீவாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். பாடல்களை சஞ்சய் செல்வம் எழுதியுள்ளார் ஒருங்கிணைப்பு பணிகளை பாம்பே செல்வம் கவனிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பொள்ளாச்சி, திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Saramaari movie based on Engineering students

Saramaari movie based on Engineering students

 

ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடிக்கு கீ கொடுக்கும் கௌதம் மேனன்

ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடிக்கு கீ கொடுக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham menonபுதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு…’ என்ற சிங்கிள் பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிடவுள்ளார்.

இப்பாடலை நாளை நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு அவர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி அரசு ஆதரவுடன் உருவான சல்மான் கான் படம்

அபுதாபி அரசு ஆதரவுடன் உருவான சல்மான் கான் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tiger zinda hai movie stillsசல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம்.

படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர்.

இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார்.

இதைப்பற்றி இயக்குனர் அலி அபாஸ் கூறும் பொழுது,

படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக, நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம். படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினை தேர்வு செய்தோம்.

ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். குதிரை சாவரியில் நடக்கும் கடினமான சண்டை காட்சி மொராக்கோவில் படமாக்கப்பட்டது, அந்நாட்டு நிலப்பரப்பின் அமைப்பு படத்தின் காட்சிக்கு தேவையான விஷூவல்ஸை தந்தது.

ஹாலிவுட் படங்களான ட்ராய் மற்றும் மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட டிரெய்ண்ட் குதிரைகளும் கிடைத்தன.

‘ஸ்வாஹ் சே கரேங்கே சப்கா ஸ்வாகத்’ என்ற பாடலுக்கு கிரீஸ் நாட்டின் எழில்மிகு இடங்கள் பொருத்தமாயிருந்தது. அபுதாபி ஒரு பாலைவன நிலப்பரப்பை கொடுத்தது.

அபுதாபி அரசு எங்களுக்கு பெரும் ஆதரவை கொடுத்தது, புரொடக்ஷ்ன், இராணுவம் மற்றும் விமானப்படை போன்ற உதவிகள் அபுதாபி அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கிடைத்தது.

டில்லியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் இரண்டுக் காட்சிகளை படமாக்கினோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும் உள்ளது மற்றும் கதையின் திருப்புமுனையும் அதில் அடங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷ்ன் அதிரடி படமான டைகர் ஜிந்தா ஹே படத்தை உலகத்தரத்தில் உருவாக்க பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் பணிபுரிந்த குழுவினருடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளோம்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் திரில்லான அனுபவத்தை கொண்ட, சல்மான் கான் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.

முதலில் உழைப்பை முதலீடு செய்; கார்த்திக்கு சூர்யா அட்வைஸ்

முதலில் உழைப்பை முதலீடு செய்; கார்த்திக்கு சூர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiவினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான படம் தீரன் அதிகாரம் ஒன்று.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றும் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது…

நான் எவ்வளவோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் என் முதல்படமான பருத்தி வீரன் படம் போன்று மற்ற படங்கள் இல்லையே என பலரும் சொல்கிறார்கள்.

முதல் படமே வெற்றிப் படமாக பலருக்கும் அமையாது. ஆனால் பல வருடங்கள் பலரும் அதையே சொன்னபோது வருத்தமாக இருந்தது.

தற்போது நீங்கள் நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்றால் அது தீரன் அதிகாரம் ஒன்று படம்தான் என சொல்கின்றனர். இது மகிழ்ச்சியை தந்துள்ளது.

என் அண்ணன் (சூர்யா) அடிக்கடி சொல்வார். பிக்சட் டெப்பாசிட் போல நம் உழைப்பை சேவிங் செய்துக் கொண்டே இருப்போம். அது பிற்காலத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்பார். அதையே நான் செய்து வருகிறேன்.

தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம்.

இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர்.

தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள்.

வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன்.

எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம்.

சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.” என்று பேசினார்.

More Articles
Follows