தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று அண்ணாதுரை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இப்பட நாயகனும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது திரையுலகில் தான் ஜெயித்த ரகசியம் பற்றி பேசினார்.
காஜேஜ் நாட்களில் முதன்முறையாக எந்த வித பயிற்சியும் இல்லாமல் மேடையேறி ஒரு பாடலை பாடினேன்.
அதன்பின் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. இசை பள்ளிக்கு சென்று முறையாக இசை கற்கவில்லை.
ஆனால் இசை கற்காமல் இன்று இசைத்‘ துறையில் இருக்கிறேன் என்பதே உண்மை. அதுபோல் நடிப்பை கற்காமல் இப்போது நடிப்புத் துறையிலும் நுழைந்துவிட்டேன்.
ஒருமுறை முதன்முறையாக ரத்தம் கொடுக்க நினைத்தபோது.. என்னை பரிசோதித்தால் அவர்கள் அசந்துவிடுவார்கள். இதுபோன்ற ரத்த வகையே நாங்கள் பார்த்தது இல்லை. என்பார்கள் என்று நினைத்துக் கொண்டுதான் ரத்தம் தானம் செய்தேன்.
அதுபோல் சென்னைக்கு வந்து முதல்முறையாக இறங்கியபோது மண்ணில் கால் வைத்தபோது மழை வரும் என சினிமா பாணியில்தான் யோசித்தேன்.
இது ஏன்? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு முயற்சியும் என்னையறியாமல் ஏதோ நினைப்பேன்.
ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்கலாம். ஆனால் பயிற்சி இருந்தால் முறையாக ஜெயிக்கலாம்.
ஆனால் நான் எந்தவித பயிற்சி இல்லாமல் எப்படியோ வந்துவிட்டேன். இது சிலருக்கு உதாரணமாக இருக்கலாம். இப்படியும் சாதிக்க முடியும் என்று அவர்களுக்கு புரிய இது ஒரு உதாரணமாக இருக்கும்.
ஆனால் இதற்கு பின்னணியில் நான் பட்ட வலிகள் அவமானங்கள் அதிகம். அவற்றை நான் மறைத்துவிட்டேன்.” என்று மனம் திறந்து பேசினார் விஜய்ஆண்டனி.