விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

விஜய் பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijayசினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய போது, காதல் ரூட்டில் பயணித்தார் விஜய்.

ஆனால் சமீபகாலமாக சமூகம் சார்ந்த விஷயங்களை தன் படங்களில் கொண்டு வருகிறார்.

கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, பைரவா படத்தில் கல்வி ஊழல் பிரச்சினை என கலக்கி வருகிறார்.

இதனால் அரசியலில் இறங்க விஜய் ஆழம் பார்க்கிறாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும், அண்மையில் விஜய் பேசிய… விவசாயிகளை காக்க நல்லரசு உருவாக வேண்டும் என்று அவர் கூறிய கருத்து அரசியல் உலகில் அதிகம் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் கால் பதிப்பதற்கான பணிகளை விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும், மன்ற உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், விஜய்யின் 43 பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நெருப்பில்லாமல் புகையாது என்பது இதுதானோ…??

சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை; படக்குழுவை மிஞ்சிய ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை; படக்குழுவை மிஞ்சிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unnamed (1)வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு இன்றுமுதல் தன் 12வது படத்தில் நடிக்கத் துவங்குகிறார் சிவகார்த்திகேயன் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

பொன்ராம் இயக்கவுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் சிம்ரன் மற்றும் நெப்போலியன் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை தனது 4வது படைப்பாக்க உருவாக்குகிறது 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் .

தென்காசியில் ஒரு மாதத்திற்கு இதன் சூட்டிங் நடைபெற உள்ளது.

இதற்கான பூஜை இன்று போடப்பட்டது.

இதே வேளையில் இப்படம் வெற்றி பெற, சிவகங்கை மாவட்ட சிவகார்த்திகேயன் தலைமை மன்றம் சார்பாக கோயிலில் பூஜையும் போடப்பட்டது.

சிவகார்த்திகேயன் படக்குழுவினரையே இந்த ரசிகர்கள் மிஞ்சி விட்டார்களே…

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and kasthuri rajaதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து டிவிக்களில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.

இதுபற்றி பிரபலஇயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசுகையில்….

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் தெரிவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் குற்றமே.

அதைத்தான் இன்று நிறைய டிவி சேனல்கள் செய்கின்றன.

நான் தயாரித்த ‘நாட்டுப்புற பாட்டு’ ‘துள்ளுவதோ இளமை’ என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன்.

ஆனால் என் படங்களின் எந்தவித உரிமைகளையும் பெறாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? ” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கட்சி பற்றி அறிவிப்பு வெளியாகும் தேதி

ரஜினியின் கட்சி பற்றி அறிவிப்பு வெளியாகும் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகடந்த 20 நாட்களாக காலா படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கவிருக்கிறார்.

தற்போது ஓய்வில் இருக்கும் சமயத்தில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் தன் நலம் விரும்பிகளை சந்தித்து அரசியல் பற்றி ஆலோசனை செய்து வருகிறாராம்.

இதன்படி வருகிற டிசம்பர் 12ஆம் தேதி தன் பிறந்தநாளில் தனிக்கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சலியை வாழ்த்தி காதலை கன்பார்ம் செய்த ஜெய்

அஞ்சலியை வாழ்த்தி காதலை கன்பார்ம் செய்த ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai anjaliஎங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த பிறகு எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர் ஜெய்-அஞ்சலி ஜோடி.

தற்போது பலூன் என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அதற்கு அஞ்சலியை வாழ்த்தி ட்விட்டரில் ஜெய் தான் எழுதிய ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

நீ எனக்கு எப்படி ஸ்பெஷலோ அதுபோல் இந்த பிறந்தநாள் உனக்கு அமையட்டும் என வாழ்த்தியுள்ளார்.

அதற்கு அஞ்சலியும் நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி என பதிலளித்துள்ளார்.

Jai confirms his love on Anjali on her Birthday

Anjali‏ @yoursanjali

Anjali Retweeted Jai

Thanks fr being with me J ,, I wish you always wll ,, thanks fr this special note on my special day

jai letter to anjali

தளபதியின் தைரியத்தை பாராட்டித் தள்ளும் தல ரசிகர்கள்

தளபதியின் தைரியத்தை பாராட்டித் தள்ளும் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith thala thalapathyகத்தி படத்தில் கத்தி கத்தி சொன்ன விவசாயிகள் பிரச்சினை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

இதுதொடர்பான தனது கருத்தை அண்மையில் தெரிவித்து இருந்தார் நடிகர் விஜய்.

நம் நாடு வல்லரசு ஆவதை விட தற்போது விவசாயிகளின் நலன் காக்கும் நல்லரசாக மாற வேண்டும் என்று பேசியிருந்தார்.

விஜய்யின் இந்த தைரியமான பேச்சை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய்யை அஜித் ரசிகர்களும் பாராட்டி தங்கள் கருத்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

Ajith fans supports Vijays speech regarding Farmers struggle

More Articles
Follows