OFFICIAL பீட்சா ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 4’ அறிவிப்பு

OFFICIAL பீட்சா ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 4’ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

தரமான திரைப்படங்கள் மற்றும் தேடல் உள்ள திறமைகளின் தாயகமான தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சி.வி. குமார் தயாரித்த பீட்சா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா’ மற்றும் ‘பீட்சா 3: தி மம்மி’ திரைப்படங்களும் தொடர் வெற்றியை பெற்றன.

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்குமனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீட்சா 3: தி மம்மி’ ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உலகெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, ‘பீட்சா’ திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்…

“பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி ‘பீட்சா’ வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது.

எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறினார்.

Producer CV Kumar announces Pizza 4 movie

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் மேன் கதையை சொல்ல V-1 ஹீரோ இயக்குனரானார்

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் மேன் கதையை சொல்ல V-1 ஹீரோ இயக்குனரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும். இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்.

Indias first post man story Harkara

‘சர்தார் 2’ படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க திட்டம்.; இசையமைப்பாளர் மாற்றம்.?!

‘சர்தார் 2’ படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க திட்டம்.; இசையமைப்பாளர் மாற்றம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ‘சர்தார்’.

பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

உளவாளி மற்றும் தண்ணீர் மாஃபியாவை பற்றி இந்த படம் பேசி இருந்தது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் தயாரித்திருந்தார்.

இதில் ராசி கண்ணா, ரஷிஜா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 100 கோடி வசூலை எட்டிய நிலையில் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது சர்தார் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் பிஎஸ் மித்ரன். இதில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன

முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் தற்போது சர்தார் 2 பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

Sardar 2 updates Vijay Sethupathi and Yuvan will join with Karthi

‘மாமன்னன்’ & ‘வாழை’ படங்களை தொடர்ந்து துருவ் படத்தை தொடங்கும் மாரி

‘மாமன்னன்’ & ‘வாழை’ படங்களை தொடர்ந்து துருவ் படத்தை தொடங்கும் மாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படம் பாராட்டுகளை பெற்ற நிலையில் அடுத்த படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.

கலையரசன் மற்றும் நிகிலா விமல் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வாழை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இது சிறுவர்களை மையப்படுத்தி உருவான படமாகும். இந்த படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ்.

இதில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் தொடங்க மாரி செல்வராஜ் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

தூத்துக்குடியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பின்னர் கபடி போட்டியில் பல விருதுகளை வென்று இந்திய அரசின் அர்ஜுனா விருதையும் வென்றவர் மனத்தி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj next movie after Maamannan and Vaazhai

ஆழ்ந்த இரங்கல்… அண்ணாமலை சர்ச்சை..; பேரரசு உருக்கமான வேண்டுகோள்

ஆழ்ந்த இரங்கல்… அண்ணாமலை சர்ச்சை..; பேரரசு உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது அரசியல் பதிவல்ல
******************************
ஒரு கட்சியினர் அரசியல் எதிர்ப்பை காட்டுவதற்கு கருப்பு கொடி காட்டுவது, GO BACK என்று சொல்லுவது, ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்புவது இதெல்லாம் சகஜம்.

இதே எதிர்ப்புமுறை அந்தக் கட்சியினருக்கு திரும்புவதும் சகஜம்.

ஆனால் இந்த *ஆழ்ந்த இரங்கல்* என்ற எதிர்ப்பு பதிவு அப்படி பார்த்து விட முடியாது. இன்று இது திரு. அண்ணாமலை அவர்களின் நடை பயணத்திற்கு எதிரானதாக இருக்கலாம்.

இதே போல் நாளை வேறு ஒரு தலைவரின் நடை பயணத்திற்கு இதே வாசகம் திரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாளை ஒரு தலைவரின் பிறந்தநாளுக்கோ அல்லது ஒரு கட்சிப்பிரமுகரின் திருமண விழாவிற்கோ வேறு குடும்ப விழாவிற்கோ இதே ஆழ்ந்த இரங்கல் என்ற துக்ககரமான வார்த்தை எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பொதுத்தலங்களில் பரவி வந்தால் ஒருவேளை அந்த அரசியல் தலைவரோ, பிரமுகரோ தாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வீட்டில் மனைவிமாரோ, தாயோ அல்லது மற்றவர்களோ ஒரு பிறந்த நாளின் போது, ஒரு நல்ல நாளின்போது இந்த மாதிரி லச்சக்கணக்கான ஆழ்ந்த இரங்கல் என்ற அபசகுண வார்த்தையை அவர்கள் பார்க்க நேர்கையில், அவர்களின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்!

அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெய்வ பக்தி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும்!
தற்பொழுது பதிவிடுபவர்களுக்கு நாளை எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை.

கட்சி தலைமைக்குத் தான் நாளை மிகப் பெரிய பாதிப்பாக உருவாகும். கடவுள் நம்பிக்கை இருக்கோ, இல்லையோ, அறச்சொல் நாளை நமக்கே எதிர்ச் சொல்லாக மாறிவிடும் என்பது உண்மை! எதிர்ப்பை காட்ட எத்தனையோ வழி இருக்கிறது.

தயவு செய்து இந்த அறச்சொல்லை தவிர்ப்போம்!
அரசியல்வாதிக்காக அல்ல அவர்களின் குடும்பத்திற்காக!
நன்றி! வாழ்வோம்! வாழ வைப்போம்!

—இயக்குனர் பேரரசு

Director Perarasu emotional note about BJP Annamalai RIP

பிரபல நடிகரின் மகளும் நடிகையுமான கீர்த்தியை மணக்கும் அசோக் செல்வன்.!?

பிரபல நடிகரின் மகளும் நடிகையுமான கீர்த்தியை மணக்கும் அசோக் செல்வன்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஆகஸ்ட் 1ம் தேதி பிரபல நடிகர் கவின் திருமண செய்தி சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

மோனிகா என்ற தன் காதலியை ஆகஸ்ட் 20ஆம் தேதி மனக்கவிருக்கிறார் நடிகர் கவின்.

தற்போது மற்றொரு இளம் நடிகரின் திருமணம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.

அவர் வேறு யாரும் அல்ல.. சமீபத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அசோக் செல்வன் தான்

சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் ‘போர் தொழில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தையும் கொடுத்தார்.

கீர்த்தி பாண்டியன்

இந்த நிலையில் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் மணக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களின் திருமணம் இதே ஆண்டு 2023 செப்டம்பர் மாதத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் அசோக் செல்வனுக்கு தற்போது 33 வயது ஆகிறது. கீர்த்தி பாண்டியனுக்கு 29 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தும்பா’ மற்றும் ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கீர்த்தி பாண்டியன்

Ashok Selvan and Keerthy Pandian wedding news

More Articles
Follows