இளையராஜா – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ பாகம் 1 & 2′ பக்கா அப்டேட்ஸ்

இளையராஜா – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ பாகம் 1 & 2′ பக்கா அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும்,
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்,
விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும் Red Giant Movies சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் ‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தமிழில் ஒரு முழுமையான திரை அனுபவம் தரும் படைப்பாக, பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக மாறி நிற்கும் விடுதலை படம் பார்வையாளர்களிடம் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட ரூ.10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது.

ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கிறார்.

பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்‌ஷன் ப்ளாக்கில் பங்கேற்கிறார்கள்.

விடுதலை படத்தில் பிரமாண்டமான நட்சத்திர கூட்டணி அமைந்துள்ளது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 ஆகிய இரு படங்களையும் Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

JUST IN அருண்விஜய்க்காக வரல.. அவரை பார்த்தால் போலீசுக்கே பொறாமை – பார்த்திபன்

JUST IN அருண்விஜய்க்காக வரல.. அவரை பார்த்தால் போலீசுக்கே பொறாமை – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘சினம்’.

அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார்.

இதில் நாயகியாக பாலக் லால்வனி நடிக்க முக்கிய வேடத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

‘சினம்’ படம் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளள நிலையில் இன்று இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில்… சிவாங்கி மேடை ஏறினார்.

பின்னர் “சொல்லடி என் கண்மணி….” என்ற பாடலை அருண்விஜய் மேடையில் பாடினார்.

பின்னர் பார்த்திபன் பேசியதாவது…

“நான் அருண்விஜய்க்காக வரவில்லை. அருண் (இந்த பூமிக்கு) வர காரணமான விஜயகுமாருக்காக வந்தேன்.

விஜயகுமார் குடும்பத்தை 30 வருடங்களாக தெரியும். நெருக்கமான பழக்கம். அவரின் குடும்பத்தில் அனைவருமே அழகு.

அருண்விஜய்யை பார்த்தால் போலீசுக்கு பொறாமை.. ஏனென்றால் தமிழக போலீஸ் என்னை போல (தொப்பை) இருப்பார்கள். ஆனால் அருண் செம ஃபிட்டாக இருக்கிறார்.

இந்த பட மியூசிக் டைரக்டர் Shabir or Shabeer தெரியல.. சாங்ஸ் போதையாக உள்ளது.”

என பார்த்திபன் அவரது பாணியில் பேசினார்.

 

இன்ஸ்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் சுற்றும் அஜித்தை போட்டுக் கொடுத்த நபர்

இன்ஸ்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் சுற்றும் அஜித்தை போட்டுக் கொடுத்த நபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் ஒரு பைக் ப்ரியர்.

இவர் பைக்கில் சாகசமும் செய்வார். சுற்றுப்பயணமும் செய்வார். இந்தியாவின் பல மாநிலங்களில் இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களும் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகும்.

அஜித் ரசிகர்களும் அந்த படங்களை அதிக அளவில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்திருப்போம்.

தற்போது இமயமலை பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலானது.

9 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – அஜித்.; தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

இந்த பயணத்தில் AK61 பட நாயகி மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.

அஜித் & மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்ட போட்டோஸ் சமீபத்தில் வெளியாகின.

இதனிடையே அஜித் பயணத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அஜித் BMW R 1200 என்ற பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பைக் எண்ணை ஒரு மொபைல் ஆப்பில் வைத்து ஆராய்ந்த நெட்டிசன்கள்…

“இந்த பைக் 2019ல் அஜித் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது. பைக் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டே காலாவதியாகி விட்டதாகவும் இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித் பயணம் செய்து வருகிறாரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Ajith Bike Insurance

தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர் கல்யாண்.; யோகிபாபுக்கு மார்கெட் இருக்கு – பாக்யராஜ்

தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர் கல்யாண்.; யோகிபாபுக்கு மார்கெட் இருக்கு – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில்
யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்…

*தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது…*

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி.

அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம் நன்றி.

*தயாரிப்பாளர் கார்த்திக் கூறியதாவது…*

இது எங்களுடைய முதல் திரைப்படம். இது குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்த படத்தை இயக்குனர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன்.

*நடிகை ஷஞ்சிதா ஷெட்டி கூறியதாவது…*

படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது.

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

*ஜாக்குவார் தங்கம் கூறியதாவது…*

தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று இந்த தயாரிப்பாளர்களிடம் நான் கேட்டுகொள்கிறேன். இந்த படம் நிச்சயமாக வெற்றியடைந்தே தீரும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

*நடிகை கோமல் ஷர்மா கூறியதாவது…*

இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம், இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி.

இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

*இயக்குனர் விருமாண்டி கூறியதாவது…*

எல்லா இயக்குனருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இயக்குனர் கல்யாண் இது போன்ற படத்தை உருவாக்கியது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இதுபோன்ற படங்களை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

*பெப்சி சிவா கூறியதாவது…*

இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழ் சினிமாவிற்குள் முதன்முறையாக நுழைகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். நன்றி.

*இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது…*

புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது.

அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

*இயக்குனர் கல்யாண் கூறியதாவது…*

தயாரிப்பாளர் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்த படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது.

இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

*நக்கீரன் கோபால் கூறியதாவது…*

இந்த படத்தின் கதைகரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன்.

தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது.

இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்.

இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி,
KPY பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தினை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார்.

Netco Studios மற்றும் ATM Productions நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் T மதுராஜ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Shoe Audio and Trailer Launch Event highlights

90s & 2K Kids-க்கு தான் லவ் வரணுமா.? 80s KID காதலை சொல்ல வருகிறாள் CALL GIRL

90s & 2K Kids-க்கு தான் லவ் வரணுமா.? 80s KID காதலை சொல்ல வருகிறாள் CALL GIRL

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று நாயகனாக வளர்ந்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

இவர் மறைந்த நடிகர் சிவராமனின் மகன் ஆவார். ரஜினியுடன் பேட்ட, சூர்யாவுடன் ஆறு, விக்ரமுடன் சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

விரைவில் ரிலீஸ் ஆக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நாயகனாக நடிக்கும் ‘CALL GIRL’ என்ற படத்தின் விவரம் வருமாறு..

திருமணமாகாத 80’s Kids நாயகனுக்கு திடீரென்று காதல் கைகூட, சந்தோஷத்தில் திக்குமுக்காடும் நேரத்தில் அவன் காதலிக்கும் பெண்ணின் செயலால் திருமணம் நின்று போகிறது.

மனமுடைந்த நாயகன் என்ன ஆனான் என்பதையும் மீண்டும் தடைபட்ட திருமணம் நடந்தேறியதா என்பதையும் திருமணமாகாத 80 “s kids இளைஞர்கள் படும்பாட்டை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் படம் தான் ”கால் கேர்ள்”.

இத்திரைப்படத்தில் நாயகனாக ஆதேஷ் பாலாவும் நாயகியாக ஜெசியும் மற்றும் சிரிக்கோ உதய், லொள்ளுசபா புகழ் சதீஷ், வெங்கட்ராஜ், நாதஸ்வரம் புகழ் சுதா புஷ்பா, அபர்னா, சாதுவன் நடித்துள்ளனர்.

பாபு.கே.செல்வராஜன் ஒளிப்பதிவில் S.சதீஷ்குமார் இசையில் ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தினை இயக்குனர் விஜய் மணி இயக்கியிருக்கிறார்.

பூஜாலட்சுமி பிலிம்ஸ் சார்பில் வி.சாதுவன் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், விரைவில் இப்படம் திரை விருந்தாக வரவிருக்கிறது.

call girl

JUST IN கேரளாவை போல தமிழ்நாட்டுல மதிப்பதில்லை.; ‘ஷூ’ விழாவில் லியாகத் அலிகான் & அஜயன் பாலா ஆவேசம்

JUST IN கேரளாவை போல தமிழ்நாட்டுல மதிப்பதில்லை.; ‘ஷூ’ விழாவில் லியாகத் அலிகான் & அஜயன் பாலா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஷூ’. (REPEAT SHOE)

இப்படத்தின் வித்தியாசமான தலைப்பை போன்று இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உருவாகியுள்ளதாம்.

நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்க இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘ஷூ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பாக்யராஜ், கதாசிரியர் லியாகத் அலிகான், எழுத்தாளர் அஜயன் பாலா, ஜாகுவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ், நடிகை ஷீலா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கதாசிரியர் லியாகத் அலிகான் & எழுத்தாளர் அஜயன் பாலா இருவரும் பேசும்போது…

“தமிழ் சினிமாவில் கதாசிரியர்களை மதிப்பதில்லை. ஆனால் கேரளாவில் ஒரு படம் உருவாகும் போதே Script writer யார் என்றே கேட்கிறார்கள். கதை தான் அங்கு நாயகன். அந்த நிலை இங்கு வர வேண்டும்.”

இவ்வாறு ஒரே கருத்தை இருவரும் பேசினர்.

More Articles
Follows