தீவிர ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி

தீவிர ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து காமெடி நடிகராக உயர்ந்தவர் சூரி.

தற்போது கதையின் நாயகனாகவும் படங்களின் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

ரசிகரின் அம்மாவை உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். “என் அன்பு தம்பிகள். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை” என சூரி பேசினாராம்.

Soori visits his fan’s home by using auto

‘மாவீரன்’ படத்தில் தன் கேரக்டர் என்ன.? மிஷ்கின் ஓபன் டாக்

‘மாவீரன்’ படத்தில் தன் கேரக்டர் என்ன.? மிஷ்கின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்த படம் ‘மாவீரன்’.

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய கேரக்டர் குறித்து மிஷ்கின் சமீபத்திய பேட்டி கூறியுள்ளதாவது…

‘மாவீரன்’ படத்தில் கொடுமையான வில்லனாக நடித்திருக்கிறேன். வேஷ்டி சட்டை அணிந்து சிவகார்த்திகேயன் உடன் மோதும் அதிபயங்கர சண்டை காட்சிகள் உள்ளன. படம் சிறப்பாக வந்திருக்கிறது. எனத் தெரிவித்துள்ளார்.

mysskin reveals his characted in sivakarthikeyan’s maaveeran

இந்திய வீரர்களின் குரல்களை மூடக்கூடாது.; மல்யுத்த வீரர்களுக்காக ரித்திகா சிங் வாய்ஸ்

இந்திய வீரர்களின் குரல்களை மூடக்கூடாது.; மல்யுத்த வீரர்களுக்காக ரித்திகா சிங் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.

அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள்.

அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Ritika Singh Supports Indian Female Wrestlers Who Are Protesting For Justice

தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விஜய் ஆண்டனி எடுத்த முடிவு

தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விஜய் ஆண்டனி எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன் 2’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தாண்டி படத்தின் தலைப்புக்கு ஏற்ப பிச்சைக்காரர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

பிச்சைக்காரர்களுக்கு போர்வை ஃபேன் விசிறி தலையணை உடை உள்ளிட்டவைகளை வழங்கி அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார் விஜய்.

மேலும் பிச்சைக்காரர்களுக்கு என ‘பிச்சைக்காரன்2’ பட சிறப்பு காட்சியை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.

மேலும் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் பிச்சைக்காரர்களுக்கு தன் கையால் பறிமாறி உணவளித்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில் கேன்சர் நோயாளி சிகிச்சைக்கு ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பை விஜய் ஆண்டனி தரப்பு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல். மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியை விஜய் ஆண்டனி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijay Antony’s decision to help those suffering from serious illness

விபத்தில் சிக்கிய ‘புஷ்பா 2’ படக்குழுவினர்.; அதிர்ச்சியில் அல்லு அர்ஜூன்.!

விபத்தில் சிக்கிய ‘புஷ்பா 2’ படக்குழுவினர்.; அதிர்ச்சியில் அல்லு அர்ஜூன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியானது.

இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம், வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது பட குழுவினர் இரண்டாம் பாகத்தின் படபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்.. பட குழுவினர் படப்பிடிப்புக்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில், ‘புஷ்பா 2’ பட குழுவினர் தெலுங்கானா மாநிலம், நல்ல கொண்டாமாவட்டம் நர்கெட்பள்ளி என்ற இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, துரதிஷ்டவசமாக எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி, விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ‘புஷ்பா 2’ பட குழுவினர் சிலர், பலத்த காயமடைந்த நிலையில் ஒரு சிலர் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

விபத்தில் காயம் அடைந்த படக்குழுவினர் அனைவரும், உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும், இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

allu arjun starring pushpa 2 movie crew meets with a road accident

ரஜினி அரசியலுக்கு வருவது வேஸ்ட்.. அண்ணன் சத்ய நாராயணன் ஆவேச பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவது வேஸ்ட்.. அண்ணன் சத்ய நாராயணன் ஆவேச பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது உடல் நலனை கருத்தில் கொண்டு இனி அரசியலுக்கு வர போவது இல்லை என சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

மீண்டும் மனம் மாறி ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அது குறித்து பேசிய ரஜினி அண்ணன் சத்ய நாராயணன் இனி ரஜினி அரசியலுக்கு வருவது பிரயோஜனம் இல்லை.

வயதாகி விட்டது , வந்தாலும் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்றார் அவர். அவரது இத்தகைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sathya Narayanan talks about Rajinikanth’s politics

More Articles
Follows