தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த விழாவில் மேடை ஏறி உதயநிதி பேசும் போது..
” வடிவேலு இந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படம் தொடங்க வேண்டாம் என நான் மாரி செல்வராஜிடம் கூறிவிட்டேன்.
வடிவேல் ஒப்புக்கொண்ட பிறகு நான் தான் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரகுமான் ஆகியோரிடம் பேசி இது என் கடைசி படம் என்று கூறி இந்த மாமன்னன் படத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தேன்.
நான் காட்சியில் இல்லாத போது வடிவேலு காட்சிகளை படமாக்கினார் மாரி செல்வராஜ். அதன் பின்னர் அந்த 10/நிமிட காட்சிகளை பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை.
நான் வடிவேலுவை கட்டிப்பிடித்து பாராட்டினேன்” இவ்வாறு மேடையில் பேசினார் உதயநிதி.
Udhayanidhi hugged Vadivelu for his performance in Maamannan