தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
இப்படத்தில் அனைவரது கவனத்தையும் வாட்ச் உமனாக நடித்த திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கவர்ந்தார்.
இதுகுறித்து தன் அனுபவங்களை கூறியதாவது…
என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.
கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன்.
வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்துக்கொண்டே புதிய பூமி நடனப் பள்ளியில் நடனம் கற்றேன்.
அதன்பின்னர் மேடை கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன்.
அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன்.
அப்போதுதான் சீனுராமசாமி என்னை அழைத்து நடிக்க வைத்தார்.
மேலும் விஜய்சேதுபதி அண்ணா என்னை ஊக்கப்படுத்தினார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை போனில் அழைத்து பேசினார்கள். எனக்கு கண்ணீர் வந்து விட்டது.
இப்போது இந்த தர்மதுரை மூலம் என் குடும்பத்தில் இணைந்துவிட்டேன்.”
என்று நெகிழ்ச்சியாக கூறினார்.