தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியானது.
பிரபல திமுக கட்சியை சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும் இதில் அரசியல் நையாண்டி அதிகமாகவே இருந்தது.
இப்படத்தில் தமிழக அரசையும் தற்போதுள்ள நடைமுறைகளையும் வறுத்தெடுத்திருந்தனர்.
எனவே படத்திற்கு பல விதத்திலும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜீ எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மற்றொரு அமைச்சராச சி.வி. சண்முகம் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் வழக்கு பதியப்படும்.
மேலும் சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும். என கூறியுள்ளார்.