OFFICIAL ‘தனி ஒருவன் 2’.; மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி & நயன்

OFFICIAL ‘தனி ஒருவன் 2’.; மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி & நயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ படத்தின் 8வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’, என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைகின்றனர்.

தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும், நயன்தாராவும் ‘தனி ஒருவன் 2’-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர்.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், ‘தனி ஒருவன் 2’ அதன் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.

சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் 26-வது திரைப்படமாக அமையவுள்ள ‘தனி ஒருவன் 2’-வை மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Thani Oruvan 2 Mohanraja to direct Jayam Ravi Nayanthara once again

கமல் அறிமுகமான முதல் பட தயாரிப்பு நிர்வாகி மரணம்.; உலகநாயகன் உருக்கம்

கமல் அறிமுகமான முதல் பட தயாரிப்பு நிர்வாகி மரணம்.; உலகநாயகன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.வி.எம். தயாரித்த படங்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய அருண் வீரப்பன்.

இவர் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கமல்ஹாசனின் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

90 வயதான அருண் வீரப்பன் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அருண் வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

producer arun veerappan passes away

JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும் போது…

ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) முடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றார்.

ஜேசன் சஞ்சய்

அவர் ஸ்கிரிப்டை சொன்ன போது பார்வையாளர்களாக எங்களுக்கு திருப்தி.

ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில்…

“லைக்கா போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.

என்னைப் போன்ற இளம் திறமையாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்புக்காக சுபாஸ்கரன் சாருக்கு நன்றி கூறுகிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் தருகிறது. உறுதுணையாக இருந்த தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி” என்றார்.

ஜேசன் சஞ்சய்

Vijay son Jason Sanjay entry in Cinema in Lyca Production

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக சித்தார்த் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் ஜோதிகா & பிரியங்கா மோகனும் இருவரும் நாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ பட நாயகி அபர்ணா தாஸ் இணைவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

நவம்பர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் போட்டோஷூட்’ விரைவில் லண்டனில் நடைபெறும் என தெரிகிறது.

Vijay in dual role Thalapathy 68 movie updates

சீனு ராமசாமி-யின் அடுத்த அதிரடி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’

சீனு ராமசாமி-யின் அடுத்த அதிரடி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது படங்கள் எப்போதும் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ படம் வெளியானது.

இந்தப் படம் உலக அளவில் பல விருதுகளை இன்று வரை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏகன் என்ற நடிகர் ஹீரோவாக அறிமுகமாக டாக்டர் அருள் நந்து என்பவர் தயாரிக்க உள்ளார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோழிப்பண்ணை செல்லதுரை

Seenu Ramasamys next titled Kozhipannai Chellathurai

JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

JUST IN வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் ஜெகதீசன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு.்இவரது காமெடியை ரசிக்காத தமிழர்களே இல்லை என்னும் அளவுக்கு நகைச்சுவை மன்னனாக சிறந்து விளங்கி வருகிறார்.

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விரைவில் வெளியாக உள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவின் இளைய தம்பி ஜெகதீசன் என்பவர் வயது 55 இன்று மதுரையில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் ஜெகதீசன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.

மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜெகதீசன்

Actor Vadivelus brother Jagadeesan passes away

More Articles
Follows