விஜய் 66 படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் 66 படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது .

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதால் இது விஜய் நடிப்பில் உருவாகும் முதல் தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.

இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

விஜய்-அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம்.; இயக்குனர் இவரா.?

‘விஜய் 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

(வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.) இந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

அதன்படி இன்று ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘வாரிசு’ என தலைப்பிட்டு இப்பட பர்ஸ்ட் லுக்கை அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டரில்… நடிகர் விஜய் கேஸ்சூவலாக சேர் மீது கோர்ட் சூட் போட்டு அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்த பூவே உனக்காக… காதலுக்கு மரியாதை… பட பாணியில் குடும்ப சென்டிமென்ட் ஆக இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வாரிசு

Thalapathy 66 is titled Varisu . First look poster is out

JUST IN விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்.; ஆஸ்பத்திரி அதிர்ச்சி அறிக்கை

JUST IN விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்.; ஆஸ்பத்திரி அதிர்ச்சி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கேப்டன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.

இவரது படங்களில் பஞ்ச் வசனங்களும் ஆக்சன் காட்சிகளும் அனல்பறக்கும்.

ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்து வருகிறார் விஜயகாந்த்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்து வந்தார்.

கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில்…

“நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

DMDK leader Vijayakanth’s latest health update

விஜய்-அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம்.; இயக்குனர் இவரா.?

விஜய்-அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம்.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் அஜித்.

1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் நாயகனாக நடிக்க அவரது நண்பனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் அஜித்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.

2000-ஆண்டுகளில் விஜய்க்கு என்ற தனி ரசிகர் பட்டாளமும் அஜித்துக்கு என்ற தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

இதனால் நாளடைவில் இவர்களது ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் உருவாகின.

ரசிகர்கள் மோதலை பயன்படுத்திக் கொண்ட இரு நடிகர்களும் தங்களது படங்களில் அதற்கு ஏற்ப பஞ்ச் டயலாக்குகள் வைத்தனர்.

அஜித்துக்கு எதிராக விஜய் படத்தில் வசனங்கள் வைத்திருந்தால் விஜய்க்கு எதிராக அஜித் தன் படத்தில் வசனத்தை வைத்து இருப்பார்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் சண்டை அதிகரித்து வந்தது.

இவர்கள் மோதல்கள் ஒருகட்டத்தில் மோசமான ட்ரெண்டுகளை உருவாக்கியது.

இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அஜித் விஜய் ரசிகர்கள் மீது வெறுப்பு உண்டானது.

ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொத்து தகராறு போல அடித்துக் கொண்டனர் தல தளபதி ரசிகர்கள்.

இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டுவரலாம் என்ற சில இயக்குனர்களும் சில படைப்பாளிகளும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு உருவாகவில்லை. இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் வலுத்து வந்தது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என இசை அமைப்பாளரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த படத்தை நான் இயக்க நான் ரெடி எனவும் ஏற்கனவே கதை ரெடியாக உள்ளது என வெங்கட் பிரபு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pan India film starring Vijay and Ajith; Who is the director?

கமல் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களை குறிப்பிட்டு விஜய் சூர்யா படங்களை குறிப்பிடாத உதயதிதி.; கடுப்பில் ரசிகர்கள்

கமல் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களை குறிப்பிட்டு விஜய் சூர்யா படங்களை குறிப்பிடாத உதயதிதி.; கடுப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தமிழக முதல்வரின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அண்மைக்காலமாக பிரம்மாண்ட படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்று வெளியிட்டு வருகிறார்.

இவருடைய நிறுவனத்தின் பெயர் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

இந்தாண்டில் 2022 தற்போது வரை 6 படங்களை வெளியிட்டுள்ளது.

‘எதற்கும் துணிந்தவன்’, ‘எப்ஐஆர்’, ‘பீஸ்ட்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, நெஞ்சுக்குநீதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில்…

‘ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களின் வெற்றிக்கு பின்னாளிலிருந்தவர்கள்’ என கூறி, முக்கிய பணியாளர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதில், ‘ எஃப்ஐஆர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ & விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் தன் நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

ஆனால், விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படங்கள் இந்த வரிசை பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இது விஜய் & சூர்யா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த படங்கள் தோல்வி படமா? என ரசிகர்கள் சந்தேக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்’ தயாரித்த விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.58 கோடியை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு முன்னணி ஊடகத்திற்கு உதயநிதி அளித்த பேட்டியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெற்றி படம் என்றும் ‘பீஸ்ட்’ படம் மிகப் பெரிய வெற்றிப் படம் என பேட்டி அளித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Udayadithi does not mention Vijay Surya films; Fans under pressure

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் ‘புஷ்பா 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா இணையும் ‘புஷ்பா 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் பஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஊ.. சொல்றியா மாமா… ஊஹூம் சொல்றியா மாமா…. & ஹே.. மாமா..ஹே சாமி.. ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

அதுவும் ஆன்ட்ரியா பாடிய பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா ஆடிய “ஊ சொல்றீயா மாமா…” பாடலுக்கு தமிழக தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவானது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளை கதையின் பின்னணியாக கொண்டு ‘புஷ்பா 2’ உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Allu Arjun – Rashmika Join ‘Pushpa 2’ Latest Update

PRINCE RELEASE POSTPONED : ஈவு இரக்கமில்லாத டார்ச்சர்.. PAN WORLD STAR ஆகிறாரா சிவகார்த்திகேயன்.? MUST WATCH VIDEO

PRINCE RELEASE POSTPONED : ஈவு இரக்கமில்லாத டார்ச்சர்.. PAN WORLD STAR ஆகிறாரா சிவகார்த்திகேயன்.? MUST WATCH VIDEO

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ரிலீசான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மூலம் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்தன.

தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘பிரின்ஸ்’.

சிவகார்த்திகேயனை கோலிவுட்டின் பிரின்ஸ் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான்.

உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

எனவே படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 30ல் விநாயகர் சதூர்த்திக்கு இப்படம் வெளியாகும் என முன்பு அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரின்ஸ் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அனுதீப் சிவகார்த்திகேயன் சத்யராஜ் நடிகை மரியா உள்ளிட்டோர் இணைந்து ஒரு புதிய வீடியோ உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

அந்த சிறப்பான கல்கலப்பான வீடியோவை பார்த்து ரசிக்க…

Sivakarthikeyans Prince will be released on Diwali 2022

Celebration gets bigger and brighter #PrinceForDiwali ?


https://www.youtube.com/watch?v=GoA-0tHI_4k&feature=youtu.be

Sivakarthikeyan’s Prince Release date announcement video

More Articles
Follows