தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் அஜித்.
1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் நாயகனாக நடிக்க அவரது நண்பனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் அஜித்.
ஆனால் அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
2000-ஆண்டுகளில் விஜய்க்கு என்ற தனி ரசிகர் பட்டாளமும் அஜித்துக்கு என்ற தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.
இதனால் நாளடைவில் இவர்களது ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் உருவாகின.
ரசிகர்கள் மோதலை பயன்படுத்திக் கொண்ட இரு நடிகர்களும் தங்களது படங்களில் அதற்கு ஏற்ப பஞ்ச் டயலாக்குகள் வைத்தனர்.
அஜித்துக்கு எதிராக விஜய் படத்தில் வசனங்கள் வைத்திருந்தால் விஜய்க்கு எதிராக அஜித் தன் படத்தில் வசனத்தை வைத்து இருப்பார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் சண்டை அதிகரித்து வந்தது.
இவர்கள் மோதல்கள் ஒருகட்டத்தில் மோசமான ட்ரெண்டுகளை உருவாக்கியது.
இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அஜித் விஜய் ரசிகர்கள் மீது வெறுப்பு உண்டானது.
ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொத்து தகராறு போல அடித்துக் கொண்டனர் தல தளபதி ரசிகர்கள்.
இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டுவரலாம் என்ற சில இயக்குனர்களும் சில படைப்பாளிகளும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் இவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு உருவாகவில்லை. இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் வலுத்து வந்தது.
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என இசை அமைப்பாளரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த படத்தை நான் இயக்க நான் ரெடி எனவும் ஏற்கனவே கதை ரெடியாக உள்ளது என வெங்கட் பிரபு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pan India film starring Vijay and Ajith; Who is the director?