25 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு 2 மனைவிகள்; தங்கையாக கீர்த்தி

25 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு 2 மனைவிகள்; தங்கையாக கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivar 168தர்பார் படத்தை அடுத்து தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சிவா இயக்க இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.

இப்படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களில் குஷ்புவும், மீனாவும் ரஜினிக்கு இரண்டு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

25 வருடங்களுக்கு முன் வெளியான வீரா படத்தில் மீனா மற்றும் ரோஜா இருவரும் ரஜினிக்கு மனைவிகளாக நடித்திருந்தனர். தற்போதும் இந்த படத்தில் மீனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ஒரு பாடலுக்கே 10 கோடியா.? அதிரவைக்கும் அருள்

அடேங்கப்பா.. ஒரு பாடலுக்கே 10 கோடியா.? அதிரவைக்கும் அருள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legend Saravana Arul debut movie song shoot cost Rs 10 crores சென்னையில் தி. நகரில் மிக பிரம்மாண்டமான துணிக்கடை என்றால் சரவணா ஸ்டோர்ஸ் தான்.

இந்த கடையை போல் இந்த கடை விளம்பரங்களும் படு ஜோர். இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனர் அருள் சரவணன் தான்.
இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இநத் படத்தை இயக்கி வருகின்றனர்.
சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடிக்க 2வது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் அருள் சரவணன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பெரும் பொருட் செலவில் தயாராகும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்துள்ளனர்.

பெரிய பிரமாண்ட செட்டுகள் அமைத்து பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

ஒரு பாடலுக்கே பத்து லட்சம்னா இந்த படம் முடிவதற்குள் எத்தனை லட்சங்களை இறைக்க போகிறோரோ? என கோலிவுட்டே அருளை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.

இந்த பாடல் காட்சியில் சரவணன் அருள் கீர்த்திகா திவாரி நடனமாடியுள்ளனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Legend Saravana Arul debut movie song shoot cost Rs 10 crores

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ஆர் வெற்றி; அருள்பதி தோல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendar won in Distributors election 2019சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் இன்று டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது.

532 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கு, டைரக்டரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா அவர்கள் மேற்பார்வையில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

இதன் முடிவு இதோ….

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)
பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)
துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

T Rajendar won in Distributors election 2019

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

66வது பிலிம்பேர் விழாவில் விருதுகளை அள்ளிய நடிகர்கள் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who won 66th film fare awards 2019 in Tamil cinemaபிரபலமான 66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தென்னிந்திய மாநில மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படவுலகினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கிடைத்த விருதுகளின் விவரம் இதோ..

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் : ராம்குமார் – ராட்சசன்

சிறந்த நடிகர் – பிரபலமானவர்
தனுஷ் – வட சென்னை & விஜய் சேதுபதி – 96

சிறந்த நடிகர் – விமர்சகர் விருது
அரவிந்த்சாமி – செக்கச் சிவந்த வானம்

சிறந்த நடிகை – பிரபலமானவர்
த்ரிஷா – 96

சிறந்த நடிகை – விமர்சகர் விருது
ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா

சிறந்த துணை நடிகர்
சத்யராஜ் – கனா

சிறந்த துணை நடிகை
சரண்யா – கோலமாவு கோகிலா

சிறந்த இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தா – 96

சிறந்த அறிமுக நடிகை
ரைசா வில்சன் – பியார் பிரேமா காதல்

சிறந்த நடன இயக்குனர்
பிரபுதேவா, ஜானி – ரௌடி பேபி… – மாரி 2

சிறந்த பின்னணி பாடகர்
சித் ஸ்ரீராம் – ஹே பெண்ணே…. – பியார் பிரேமா காதல்

சிறந்த பின்னணி பாடகி
சின்மயி – காதலே…காதலே… – 96

சிறந்த பாடலாசிரியர்
கார்த்திக் நேத்தா – காதலே…காதலே… – 96

Who won 66th film fare awards 2019 in Tamil cinema

50 கிலோ கேக்கில் இளையராஜா சிலை செய்து கோரிக்கை வைத்த ரசிகர்கள்

50 கிலோ கேக்கில் இளையராஜா சிலை செய்து கோரிக்கை வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayraja fans made 50kg Cake statue and request to Modi Govtஇராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான பேக்கரி கடையில் வருடந்தோறும் புத்தாண்டு சமயத்தில் பிரபலங்களின் உருவச்சிலையை கேக்கில் வடிவமைத்து வழக்கமாம்.

இந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் உருவச்சிலையை ஐந்தரை அடி கேக்கில் உருவாக்கியுள்ளனர்.

அதில் இளையராஜா வழக்கமாக அணியும் வெள்ளை வேஷ்டி-ஜிப்பா என அணிந்தபடி உள்ளார்.

இந்த கேக் 50 கிலோ உள்ளது. 250 முட்டைகளை கொண்டு 5 பேர் இணைந்து 6 நாட்களில் இந்த சிலையை உருவாக்கியுள்ளனர்.
அதை ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இசைஞானிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இந்த சிலையை அவர்கள் வடிவமைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Ilayraja fans made 50kg Cake statue and request to Modi Govt

பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா ரஜினி.?; நடிகர் லாரன்ஸ் அறிக்கை

பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா ரஜினி.?; நடிகர் லாரன்ஸ் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance clarify controversy around him which connected with Rajini முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசும்போது நாம் தமிழர் கட்சி சீமான் குறித்தும் நடிகர் கமல் குறித்தும் பேசியிருந்தார்.

அது அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடிகர் கமலை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார்.

இருந்தபோதிலும் லாரன்சின் இந்த பேச்சுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்து லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன்.

நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.

என்னுடைய கருத்துகளுக்கு எந்தவகையிலும் ரஜினிகாந்த் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்.

நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை.

நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன்.

இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன்.

இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.

எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lawrance clarify controversy around him which connected with Rajini

More Articles
Follows