முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறது.

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது.

நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

‘அதே கண்கள்’ வெற்றி திரைப்படத்தின் மூலம், தனது வித்தியாசமான அணுகுமுறையால் மக்களை பெரிதும் கவர்ந்த இயக்குனர் ரோகின் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன், ஒரு சவாலான கதாபாத்திரத்தில், திகிலாக வலம் வருகிறார் தமன்னா.

இவர்களுடன் பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோகின்.

டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த திகிலான நகைச்சுவைக்கு ஜி ஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, சண்டை பயிற்சிக்கு ஹரி தினேஷ் பொறுப்பேற்று இருக்கிறார்.

பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது.

கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தக் குறும்படம் சமீபத்தில் பிரபலமான யூடியூப் இணையதளத்தில் வெளியானது. சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படத்தை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இக்குறும்படம் குறித்து நடிகர் நகுல் கூறும்போது, ‘குலசாமி என்னும் குறும்படத்தை பார்த்தேன். சமுதாயத்தில் நடக்கிற நிஜமான விஷயத்தை இயக்குனர் பாக்கியராஜ் திறமையாக இயக்கியிருக்கிறார். சாதி என்ற வார்த்தையால் எத்தனை பேர், எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இக்குறும்படத்தில் பார்க்கலாம்’ என்றார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ். இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.

குலசாமி குறும்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டுவது, மற்றவர்களிடையே குலசாமி குறும்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

Kulasamy Video Link – https://youtu.be/hEcE1PQbXDY

தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

ஒட்டு மொத்த இந்திய தேசமும் ரசிக்கும் நடிகரான பிரபாஸ் நடித்துள்ள சாஹோ மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என மிகச்சிறந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை இந்த தாமதம் ஏன் தடுத்து விட போகிறது.

இந்த அறிவிப்பு, ஸ்ரத்தா மற்றும், பிரபாஸின் மாயாஜாலம் நிரம்பிய, இந்த மிகச்சிறந்த அதிரடி நிறைந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க எல்லோரையும் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”

விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகளவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், “சோழ நாட்டான்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் “நட்சத்திர பிரகாஷ்” ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் “மணிஅமுதவன்”மற்றும் “சபரீஷ்” எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.

சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

’அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களை தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இதன் ஆடியோ வரும், 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த இசை விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பதை அறிவித்துள்ளனர்.

இப்பட சேட்டிலைட் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கமல் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.

இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வரை பாத்திமா பாபு மற்றும் வனிதா உள்ளிட்ட 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி தொடங்கும்போது கமல் அறிவித்திருந்தார்.

எனவே அவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி அல்லது டாக்டர்.சீனிவாசன் கலந்துக் கொள்வார் என கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

எனவே சீரியல் நடிகை ஆல்யா மானஸா கலந்துக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.

ஆல்யாவுக்கு சின்னத்திரையில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு இவர் தான் சரியான போட்டியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

More Articles
Follows