இளைஞர்களை போராட தூண்டியவர்களுக்கு சூர்யா நன்றி

இளைஞர்களை போராட தூண்டியவர்களுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் இப்போராட்டத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்து கொண்டிருந்தார்கள்.

இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ‘ஜல்லிக்கட்டு’ மாறி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுபிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.

‘தன்னெழுச்சியான’ போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, ‘மாடுகளுக்கு எதிரானது’ என்று பொய்ப்பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது.

நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை, நமது விரல் எடுத்து நமது கண்களை குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது.
அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.

போராடுபாவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

nite

மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ‘ஜல்லிக்கட்டு’ விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றி பெற்றதாக அமைதியாகிவிடக்கூடாது.

நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் இருந்தாலும் இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுக்கும்.

இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Suriya support Jallikattu protest of Students

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்தவர்கள் கைது

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்தவர்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay fan murderவிஜய் நடித்த ‘பைரவா’ படத்தை அவரது ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அன்றைய தினமே காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி மர்மமான முறையில் இறந்தார்.

அவரது மறைவிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்நிலையில் ரவியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீனிவாசன், அப்பு, பாபு ஆகிய மூவரும் ரவியை நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Police arrested persons who involved in Vijay fans assoication leader murder

‘ஓடி ஒளிய மாட்டேன்; களத்தில் சந்திப்பேன்..’ ஜிவி. பிரகாஷ் ஆவேசம்

‘ஓடி ஒளிய மாட்டேன்; களத்தில் சந்திப்பேன்..’ ஜிவி. பிரகாஷ் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டை தடையின்றி நடத்திட வேண்டும் என இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து ஒரு சிலர் கூறும்போது, இப்போது போராடும் இவர்கள், ஜனவரி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் தன் வீடியோ பதிவில் கூறியதாவது…

“நாளை (ஜனவரி 17) காலை 6:30மணிக்கு என் தமிழ் சொந்தங்களோடு சேலம் ஆத்தூரில் ஏறு தழுவுதல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

ஜனவரி முடிந்தால் ஓடிப்போய்விடுவார்கள்’ என்று கூறுவது தவறு.

வாழ்க்கை முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன்.

என்னுடன் எனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரும் உதவிகளை செய்வார்கள்.

கொம்பு வச்ச சிங்கங்டா. களத்தில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

GV Prakash supports jallikattu statement

உலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்

உலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arunraja Kamarajதமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவிலும் சரியான உணவு, குடிநீர் கிடைக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ் பாடாலாசிரியரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

“மாவட்ட, தேசிய மற்றும் உலகத்தில் உள்ள மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கிறேன்.

அறவழிப் போராட்டக்கார்களை காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அங்கு போராட்டக்காரர்களுக்கு செல்லும் உணவுகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், அவர்கள் மீது தடியடி நடத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj
i request all the Regional,National and international medias to come to alangaanallur and save the protesters. #humanrightsviolations

Arunraja Kamaraj invited world media to support Jallikattu

விஜய்யின் சினிமா கேரியரில் ‘பைரவா’ படைத்த சாதனை

விஜய்யின் சினிமா கேரியரில் ‘பைரவா’ படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa vijay stillsபரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நான்கு நாட்கள் வசூலை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதாவது ரூ. 100 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் சினிமா கேரியரில் இவ்வளவு பாஸ்ட்டாக (4 நாட்களில்) ரூ. 100 கோடியை இந்த படம்தான் வசூலித்துள்ளதாம்.

Vijays Bairavaa movie collected rs 100 crores in 4 days

100 bairavaa

‘ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு…’ சரத்குமார் தந்த விளக்கம்

‘ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு…’ சரத்குமார் தந்த விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Sarathkumarரஜினி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சரத்குமார் கூறியதால், சரத்குமாரை ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இதற்கு சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.

பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் “ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்”

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

SarathKumar Clarification about his statement on Rajinikanth

More Articles
Follows