விஜய்-சூர்யாவுடன் மோதலை தவிர்க்க ஜெயம் ரவி திட்டம்

விஜய்-சூர்யாவுடன் மோதலை தவிர்க்க ஜெயம் ரவி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviவிஜய் நடித்துள்ள பைரவா படம் 2017 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இத்துடன் விஜய்சேதுபதி, பார்த்திபன், அருண் விஜய் ஆகியோரின் படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

இதனையடுத்து இரண்டு வார இடைவெளியில் ஜனவரி 26ஆம் தேதி சிங்கம் 3 ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் போகன் படத்தை பைரவா மற்றும் சிங்கம் 3 படத்தின் நடுவே அதாவது ஜனவரி 19ஆம் தேதி வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய், சூர்யா படங்களுடன் ஜெயம் ரவிக்கு ஏற்படும் மோதல் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மக்கள் விரும்புவரே அதிமுக பொதுச் செயலாளர்…’ – லதா

‘மக்கள் விரும்புவரே அதிமுக பொதுச் செயலாளர்…’ – லதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lathaஜெயலலிதா மறைந்த பிறகு புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ள லதா அவர்கள் அஇஅதிமுக பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில்…

என் குரு, என் ஆசான் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் ஆட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்து அதனை வெற்றிகரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது ‘மக்கள் செல்வாக்கு’. அவர்வழி வந்த புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர்.

தமிழக வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி பொறுப்பினை ஏற்ற இரண்டு முதலமைச்சர்களை பெற்ற கட்சி நம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்திதான் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

எனவே, என்னுடைய அபிப்பிராயம், என் குரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியது போல, ‘மக்கள் தீர்ப்பே- மகேசன் தீர்ப்பு’ என்பதன் அடிப்படையில் முக்கிய முடிவினை எடுக்கும் காலகட்டம் இது.

இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்ட தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை ஏற்கும் விதமாக கழக பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர், எம்.ஜி.ஆர் அவர்கள் வழிகாட்டிய மக்கள் சேவையையும், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி, மக்களுக்கு பணியாற்றுவேன் என உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார் லதா.

‘பைரவா’ உடன் இத்தனை படங்கள் மோத ‘அவர்’ காரணமா..?

‘பைரவா’ உடன் இத்தனை படங்கள் மோத ‘அவர்’ காரணமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa stillsபெரும்பாலும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாது.

ஆனால் இம்முறை அதாவது 2017 பொங்கல் தினத்தில் பைரவா படத்துடன் மோத கிட்டதட்ட எட்டு படங்கள் வெளியாகவுள்ளன.

பெரும்பாலான திரையரங்குகளை பைரவா படம் ஆக்ரமிக்கும் எனத் தெரிகிறது.

இருந்தபோதிலும் மற்ற படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்.

எனவே பைரவா படம் கணிசமான தியேட்டர்கள் எண்ணிக்கையிலேயே ரிலீஸ் ஆகும்.

இதனால் வசூலும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதன் பின்னணியில் ஒரு முக்கிய பிரமுகர் செயல்படுவதாக கூறப்படுகிறது.

அஜித்தை அறிமுகப்படுத்தியவருடன் அரவிந்த்சாமி-ரித்திகா சிங்

அஜித்தை அறிமுகப்படுத்தியவருடன் அரவிந்த்சாமி-ரித்திகா சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arvind Swamy Rithika Singhஅமராவதி படத்தின் முலம் திமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஜித்.

செல்வா இயக்கிய இப்படத்தில் நாயகியாக சங்கவி நடித்திருந்தார்.

இதனையடுத்து 20 படங்களை இயக்கிவிட்டார் செல்வா.

தற்போது அர்விந்த் சாமி மற்றும் ரித்திகா சிங் இணையவுள்ள புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக அர்விந்த் சாமி நடிக்கும் இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது.

ஜெயம் ரவி-ஆர்யா இணையும் படத்தலைப்பை அறிவித்த நிறுவனம்

ஜெயம் ரவி-ஆர்யா இணையும் படத்தலைப்பை அறிவித்த நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya And Jayam Raviஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது.

இப்படம் பற்றிய தகவல்கள் பல மாதங்களாக வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்களை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது.

சுந்தர் சி இயக்கவுள்ள இப்படத்தின் நாயகர்களாக ஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிக்கின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க சாபுசிரில் கலையை கவனிக்கிறார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரும் சுந்தர் சியுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசூல் பூக்குட்டியும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் மோதினாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாந்தனு

விஜய்யுடன் மோதினாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Shaanthanuவிஜய் நடித்த பைரவா படம் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள், புரியாத புதிர் மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட படங்களும் மோத களத்தில் உள்ளன.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருந்த பார்த்திபன் சாந்தனு இணைந்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படமும் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போய்விட்டது.

இதுகுறித்து விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு கூறியுள்ளதாவது…

“விஜய் படத்துடன் மோத முடியாது. ஆனால் பைரவா படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்திற்கு வாருங்கள்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

சபாஷ் சாந்தனு…

More Articles
Follows