தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை கௌரவித்து வருகிறார் நடிகர் சிவகுமார்.
கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை தனது அறக்கட்டளை மூலம் செய்து வரும் இவர்.
தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தனது 37ஆம் ஆண்டிற்கான நிகழ்வை நடத்தியது.
இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது…
“இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி கற்று நல்ல மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார்கள்.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்த விழா ஒரு குடும்ப விழா போன்றது.
அப்பா நடத்திய இந்த நல்ல காரியங்களை பார்க்கும்போது எங்களுக்கும் இதை தொடர ஆசை வந்தது.
1300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரிக் கனவை பலரின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்.
தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் கடந்தாண்டு முதல், 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி கொடுக்கிறோம்.
ஒரு ஒளியைக் கொண்டு மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது. அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்க வேண்டும்” என்று பேசினார் சூர்யா.