தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அவரது மச்சான் அருண்விஜய் நடித்து வரும் படம் ‘யானை’.
இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் யானை படத்தை பிப்ரவரி 4-ந்தேதி வெளியிட ஹரி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ஏற்கெனவே பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால் ஹரிக்கும் சூர்யாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் சூர்யா அந்த படத்திலிருந்து விலகினார்.
இதன் பின்னரே அருண்விஜய்யை வைத்து யானை படத்தை இயக்க ஆரம்பித்தார் ஹரி. (ஒரு வேளை இந்த படம் அதே கதையா? என்பது தெரியவில்லை.)
சூர்யாவுக்கு சிங்கம் 1,2, 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஹரி.
தற்போது தான் வளர்த்த சிங்கத்துடன் தன் யானையை மோதவிடவுள்ளார் டைரக்டர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Arun Vijay and Suriya films to clash on feb