JUST IN உங்கள எப்படி பிக்அப் பண்றது.?; பொதுமேடையில் நடிகை ரிதுவர்மாவிடம் கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில்

JUST IN உங்கள எப்படி பிக்அப் பண்றது.?; பொதுமேடையில் நடிகை ரிதுவர்மாவிடம் கேட்ட கேள்விக்கு சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’.

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

மலையாளத்தில் ‘ஆகாசம்’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது.

இந்த டிரைலரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் & டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது சென்னை வடபழனி ஃபோரம் மாலில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது ரித்து வர்மா மேடையேறிய போது அவரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர் ஜே விக்னேஷ் ஒரு கேள்வி கேட்டார்.

“உங்களை எப்படி பிக்கப் பண்றது? என்ற கேள்வியை ரசிகர்கள் சார்பாக கேட்டார்.

அதற்கு நடிகை ரிது வர்மா பதிலளிக்கையில்…

” என்னை பிக் அப் செய்ய எந்த ரிஸ்க்கும் தேவையில்லை.. நீங்கள் நீங்களாகவே இருந்தால் போதும். அதுவே எனக்கு பிடிக்கும் ” என பதில் அளித்தார் ரிது.

விஜய் 67 படத்திலிருந்து பிருத்விராஜ் விலகல்.?; லோகேஷின் அடுத்த ப்ளான் இதான்..

விஜய் 67 படத்திலிருந்து பிருத்விராஜ் விலகல்.?; லோகேஷின் அடுத்த ப்ளான் இதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாரிசு’ படத்திற்கு பிறகு தளபதி 67 படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய வழக்கமான பாணியில் இந்தப் படத்தையும் கேங்ஸ்டர் கதையாக உருவாக்குகிறார்.

இதில் விஜய்க்கு வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது கால்ஷீட் தேதி பிரச்சினை காரணமாக விஜய்- 67வது படத்திலிருந்து பிரித்விராஜ் விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு பதிலாக மலையாள நடிகரான நிவின் பாலியை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத்பாசிலை நடிக்க வைத்தவர் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம்.; திருப்பதியில் நடிகை நமீதா பேட்டி

சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம்.; திருப்பதியில் நடிகை நமீதா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைப்பவர் யார் என்றால் அது நமீதா தான்.

திருமண வாழ்க்கையில் செட்டிலான நமிதாவுக்கு இந்த 2022 வருடம் ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திரசவுத்ரியுடன் திருமலைக்கு சென்றுள்ளார்.

நடிகை நமீதாவை கண்டதும் கோவில் முன் ரசிகா்கள் திரண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நமீதா..

அப்போது அவர் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த சமயத்தில்… ” தனக்கு சினிமாவை விட அரசியலில்தான் ஆர்வம் அதிகம்.” என தெரிவித்தார் நடிகை நமீதா.

பாஜக கட்சியில் நமீதா முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Myositis நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா.; ரசிகர்கள் பிரார்த்தனை

Myositis நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா.; ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனையடுத்து படங்களில் முழு கவனத்தை செலுத்தி நடித்தி வருகிறார் சமந்தா.

கடந்த வருடம் வெளியான ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆட்டம் போட்ட *ஊ…. சொல்றியா மாமா….* என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது

தற்போது சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் யசோதா படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அதில் எந்த பதிவும் பதிவிடாமல் இருந்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சமந்தாவுக்கு ஒரு புதிய வகையான நோய் இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார்.

அதன்படி தான் Myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.

விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் சதந்தா நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரியோ ராஜ் படப்பூஜையில் லோகேஷ் கனகராஜ்.; ஓ இதான் மேட்டரா.?

ரியோ ராஜ் படப்பூஜையில் லோகேஷ் கனகராஜ்.; ஓ இதான் மேட்டரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்பின் அடிப்படையில் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

நடிகர் ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார்.

இந்தக் கதை உண்மையான அன்பு மற்றும் பல உணர்ச்சிகரமான தருணங்களை உள்ளடக்கியது ஆகும்.

இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறது.

நல்ல உணர்வைத் தரக்கூடிய வகையிலான அன்பு, குடும்பங்களின் பாசம் என இளைஞர்களும் பெற்றோர்களும் நிச்சயம் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்கக் கூடிய வகையிலான படமாகவும் திரும்பி போகும் போது நல்ல நினைவுகளைத் தரக்கூடியப் படமாகவும் இது அமையும்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர். டி. அருளானந்து (ரிச் இந்தியா டாக்டர் டி. அருளானந்து என்றும் அறியப்படுகிறார்) தயாரித்திருக்கிறார்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG விக்னேஷ்,

எடிட்டிங்: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG வருண்,
கலை: ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR,
இசை: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்.

Rio Raj

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷங்கர் மருமகன் ரோஹித் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஷங்கர் மருமகன் ரோஹித் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு, 16 வயது சிறுமி, கிரிக்கெட் பயிற்சிக்காக சென்றிருந்தபோது, ​​சங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ரோஹித் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வலுவாக திரும்பி வந்து கிரிக்கெட்டுக்கு நியாயம் செய்வேன் . நான் விரும்பும் விளையாட்டை ஆதரித்த, அனைவருக்கும் நன்றி என்றார்.

More Articles
Follows