3 காலகட்டம்.. 3 நாயகிகள்.. ஒரே ஒரு ஹீரோ.; ‘நித்தம் ஒரு வானம்’ என்ன சொல்லும்?

3 காலகட்டம்.. 3 நாயகிகள்.. ஒரே ஒரு ஹீரோ.; ‘நித்தம் ஒரு வானம்’ என்ன சொல்லும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் ‘நித்தம் ஒரு வானம்’.

இந்த திரைப்படம் நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. Ra. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் பேசுகையில்…

“நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். ‘நித்தம் ஒரு வானம்’ நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும்.

மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் , இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் ‘நித்தம் ஒரு வானம்’ இருக்கும்.

அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அதை சிறப்பாக செய்துள்ளனர்.

இவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

மேலும் இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில்…

“நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும்.

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சுவருக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ஃபீல் குட் படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ‘நித்தம் ஒரு வான’த்தை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் உற்சாகமாக.

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் மூன்று வித்தியாசமான காலக்கட்டம் மற்றும் நிலப்பரப்புகளில் அதாவது சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசையமைப்பாளர்: கோபி சுந்தர்,
ஒளிப்பதிவு: விது அய்யனா,
எடிட்டிங்: ஆண்டனி,
கலை: கமல் நாதன்,
பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்,
நடன இயக்குநர்: லீலாவதி குமார்,
நிர்வாகத் தயாரிப்பு: S. வினோத் குமார்,
ஒலிக்கலவை: T. உதயகுமார்,
உடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
சண்டை பயிற்சி: விக்கி,
படங்கள்: ஷேக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,
ப்ரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,
நிர்வாகக் கட்டுப்பாடு: மோகன் கணேசன்,
விஷூவல் புரோமோஷன்ஸ்: Feed Of Wolf

‘பொன்னியின் செல்வன்’ உடன் போட்டியா.? தனுஷ் படத்திற்கு இந்த நிலைமையா.? ரசிகர்கள் டென்ஷன்

‘பொன்னியின் செல்வன்’ உடன் போட்டியா.? தனுஷ் படத்திற்கு இந்த நிலைமையா.? ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற வாரம் செப்டம்பர் 30 உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி திரிஷா ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் சென்று படத்தை பிரமோட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெளியாவதற்கு முந்தைய நாள் செப்டம்பர் 29 இல் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வில்லன் ஹீரோ என இரு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய இடத்தில் நடித்துள்ளார். யுவன் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

பொதுவாகவே தாணு படங்கள் என்றால் ப்ரமோஷன் வேற லெவலில் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் ‘நானே வருவேன்’ படத்திற்கு இதுவரை எந்த ஒரு பெரிய விழாவும் நடைபெறவில்லை.

மேலும் படம் தொடர்பாக பிரஸ்மீட் இசை வெளியீட்டு விழா என எதுவும் நடைபெறவில்லை என்பதால் தனுஷ் ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

நயன், விக்கி திருமண வீடியோவை கௌதம் மேனன் இயக்கவில்லையா?

நயன், விக்கி திருமண வீடியோவை கௌதம் மேனன் இயக்கவில்லையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் ஜூன் 9 அன்று இந்திய சினிமாவின் சில பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

திருமணத்தைப் போலவே, ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்ட திருமணத்தின் மற்றொரு முக்கிய அம்சம், இவர்களது திருமண வீடியோவை கவுதம் மேனன் இயக்குகிறார் மற்றும் வீடியோ நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்படும் என்ற வதந்தி உலாவியது.

தற்போது கௌதம் மேனன் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை இயக்கவில்லை, நயனின் ஆவணப்படத்தை இயக்கியுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு இசை விருந்தளித்த துருவ் விக்ரம்

பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு இசை விருந்தளித்த துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் ‘Battle Fest 2022’ என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘Battle Fest 2022’ எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

துருவ் விக்ரம்

அதன் போது, இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான ‘மனசே..’ என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர்.

துருவ் விக்ரம்

இதனிடையே இன்று சர்வதேச இதய நாள் என்பதாலும், ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ எனும் பாடல் பாடியது பொருத்தமாகயிருந்தது என கல்லூரி மாணவிகள் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரம்

Dhruv Vikram birthday celebrate in college meet

வடிவேலு ரீ-என்ட்ரீ.; முந்தி கொண்ட நடிகர் விஜய் சேதுபதி

வடிவேலு ரீ-என்ட்ரீ.; முந்தி கொண்ட நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் வடிவேலு தற்போது ரீஎண்ட்ரி ஆகியுள்ளார்.

இதனையடுத்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்த வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி உடன் புதிய படத்திலும் நடிக்க உள்ளதாக வடிவேலுவே அப்டேட் கொடுத்துள்ளார்.

வடிவேலுவை பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் கமிட் செய்ய காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது விஜய்சேதுபதி முந்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathy and vadivelu joining new movie

OFFICIAL மகாபாரத காதலைச் சொல்ல நவம்பர் 4ல் சமந்தா வருகிறார்

OFFICIAL மகாபாரத காதலைச் சொல்ல நவம்பர் 4ல் சமந்தா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகப்புகழ் பெற்ற காளிதாசின் ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே ‘ஷாகுந்தலம்’.

இத்திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர்.

சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் , தில் ராஜு அவர்கள், குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா தயாரிக்க, குணசேகரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4 2022-ல் வெளிவரவுள்ளது.

சமந்தா

Samantha starring Shaakuntalam movie 4 November Release

More Articles
Follows