தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’, ‘6 மெழுகுவர்த்திகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் VZ. துரை.
அதற்குப் பிறகு சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஏமாலி’ படத்தை இயக்கினார்.
இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் சுந்தர்.சியை கதை நாயகனாக வைத்து இருட்டு என்ற படத்தை வி.இசட் துரை இயக்குகிறார்.
இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை குஷ்பூ இன்று வெளியிட்டார்.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு க்ரிஷ் இசையமைக்கிறார்.
இந்திரா சௌந்தர்ராஜன் வசனம் எழுதுகிறார்.
ஸ்க்ரீன் சீன் மீட்யா என்டெர்டெயின்மென்ட் இருட்டு படத்தைத் தயாரிக்கிறது.