காளிதாஸ்-சாம்பியன்-கேப்மாரி உள்ளிட்ட 10 படங்கள் இந்த வார ரிலீஸ்

காளிதாஸ்-சாம்பியன்-கேப்மாரி உள்ளிட்ட 10 படங்கள் இந்த வார ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

capmaari and championஇந்தாண்டு 2019 இறுதி டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம். எனவே இந்தாண்டு முடிந்தவரை தங்கள் படத்தை வெளியிட வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முனைப்பில் உள்ளனர்.

கடந்த வாரம் குண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட ரம் 4 படங்கள் வெளியாகின.

இந்த வாரம் அதனை மிஞ்சி 10 படங்கள் ரிலீசாகவுள்ளது.

இவற்றில் ஓரிரு படத்தில் மட்டுமே தெரிந்த முகங்கள் உள்ளனர்.

ஜெய் நடித்துள்ள ‘கேப்மாரி’ படத்தை நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கிறார்.

‘சாம்பியன்’ படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார்.

பரத் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‘காளிதாஸ்’.

இவை தவிர ”50 ரூவா, அய்யா உள்ளேன் அய்யா, கைலா, கருத்துக்களைப் பதிவு செய், மங்குனி பாண்டியர்கள், தேடு, திருப்பதிசாமி குடும்பம்” ஆகிய படங்களும் ரிலீசாகவுள்ளன.

தலைவர் தல தளபதி குறித்த கேள்விக்கு முருகதாஸின் முறையான பதிலடி

தலைவர் தல தளபதி குறித்த கேள்விக்கு முருகதாஸின் முறையான பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadossதர்பார் பட இசை வெளியீட்டு விழாவின் போது அப்பட இயக்குனர் முருகதாஸிடம் தொகுப்பாளினி ரம்யா ஒரு கேள்வியை கேட்டார்.

சார்.. நீங்க.. தலைவர் ரஜினி, தல அஜித், தளபதி விஜய் என மூவரிடம் ஒர்க் பண்ணிருக்கீங்க.

இந்த நடிகர்களிடம் (மூவர்களிடத்தில்) உள்ள ஒரு ஒற்றுமை நீங்கள் காண்பது என்ன? என்றார்.

அதற்கு உடனே… தலைவர் வேற லெவல். அவரை ஒப்பிடக்கூடாது.

இந்த உலகத்துலேயே பிடித்த மனிதர்னா அது ரஜினிதான். அப்படி இருக்கும் போது பிடித்த நடிகர் பிடித்த விஷயம்ன்னா கேட்டா எப்படி..?

ஒரே சந்திரன்.. ஒரே சூரியன் அது ரஜினி சார் மட்டும்தான்” என்று பதிலடி கொடுத்தார் முருகதாஸ்.

ரஜினிக்காக உயிரையே கொடுப்பேன்.. இதை செய்ய மாட்டேனா..? – அனிருத்

ரஜினிக்காக உயிரையே கொடுப்பேன்.. இதை செய்ய மாட்டேனா..? – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh and rajiniதர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசும்போது…

தர்பார் இசை பணிகளை முடித்த போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். இந்த உலகத்துலேயே எனக்கு ஒருத்தர பிடிக்கும்ன்னா அது தலைவர் ரஜினி மட்டும்தான்.

என்னை நிறைய பேர் பார்க்கும்போது எப்படி தலைவர் படத்துக்கு மட்டும இப்படி சூப்பரா இசை ஆல்பம் கொடுத்து இருக்கீங்க கேட்டாங்க..

தலைவருக்காக உயிரையே கொடுப்பேன்… இசை ஆல்பம் கொடுக்க மாட்டேனா? என பேசினார் அனிருத்.

BREAKING சிவா இயக்கத்தில் ரஜினியுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்

BREAKING சிவா இயக்கத்தில் ரஜினியுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh to romance Rajini in Thalaivar 168ரஜினி நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படம் 2020 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளனர்.

கீர்த்தியின் அம்மா நடிகை மேனகா அவர்கள் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh to romance Rajini in Thalaivar 168

50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்

50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

poovaiyarசமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா,

நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. படத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AV 31அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டெக்னிஷியன்ஸ் டீமும் ஸ்ட்ராங்காக அமைந்துள்ளது. அறிவழகனின் நெருங்கிய நண்பராக B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். எடிட்டராக வல்லினம் படத்திற்க்கு தேசிய விருது வென்ற வி.ஜே சாபு ஜோசப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் பப்ளிசிட்டி பொறுப்பை ஏற்றுள்ளார்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் விஜய குமார் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

More Articles
Follows