‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘விடுதலை’ படத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

நேற்று, படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

இப்படம் தெலுங்கில் ‘விடுதலா பார்ட் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Here’s the Telugu title & release update of ‘Viduthalai’

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுதிச்சுற்று’ படம் நடிகர் மாதவனுக்கு இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

அது முதலே வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் மாதவன்.

இந்த படத்திற்குப் பிறகு மாதவன் இயக்கி நடித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படம் ‘தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ மாபெரும் வெற்றி பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் மாதவனையும் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் மாதவன். அதன் விவரம் வருமாறு…

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.

நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.

Madhavan in lead Biopic of Miracle man GD Naidu

கீழடியில் சூர்யா – ஜோதிகா.; கோயிலில் நயன்தாரா – விக்னேஷ்.; நட்சத்திரங்களுக்காக மாறும் நடைமுறைகள்.!

கீழடியில் சூர்யா – ஜோதிகா.; கோயிலில் நயன்தாரா – விக்னேஷ்.; நட்சத்திரங்களுக்காக மாறும் நடைமுறைகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 6 தேதி கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்று உள்ளனர்.

ஆனால் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ்

இருந்த போதிலும் நட்சத்திர தம்பதிக்காக மூடப்பட்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் வெயிலில் காத்திருக்க இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு மட்டும் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக போலீஸ் அதிகாரிகளும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் அங்கு காத்திருந்தனர். ஆனால் பொது மக்களை உள்ளே அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் வெளியில் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வழிபாடு நடத்திய பின்னர் கோயிலுக்கு வெளியே நயன்தாராவை சூழ்ந்து கொண்ட ரசிகைகள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நயன்தாரா - விக்னேஷ்

அப்போது, ரசிகை ஒருவர் தோள் மீது கை வைத்ததால் கடுப்பாகியுள்ளார் நயன்தாரா.

சில தினங்களுக்கு முன் மதுரையில் கீழடி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டு அரசு அருங்காட்சியத்திற்கு நடிகர் சூர்யா – ஜோதிகா உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

அப்போதும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வெளியில் வெயில் காத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

சமீப காலமாக நட்சத்திரங்களுக்காக.. பணம் படைத்தவர்களுக்காக அரசு அதிகாரிகள் செயல்படுவது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Nayanthara and Vignesh Shivan Temple visit made controversy

12 வயது சிறுமிக்கு பெற்றோர் ஆகிய ஆரவ் – ரம்யா பாண்டியன்

12 வயது சிறுமிக்கு பெற்றோர் ஆகிய ஆரவ் – ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் ஆரவ்வும், நடிகை ரம்யா பாண்டியனும் எமோஷனல் டிராமாவில் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தில் 12 வயது சிறுமியின் தந்தையாக ஆரவ் நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு கதைக்களமாக எடுக்கப்பட்ட இப்படம், நிலத்திலும் மலைகளிலும் வாழும் ஒரு குழுவினருக்கு இடையே நடக்கும் மோதலைப் பற்றியது.

பேபி கிருத்திகா நடிக்கும் மகளின் கேரக்டரைச் சுற்றி படத்தின் முக்கிய பகுதிகள் சுழல்கின்றன.

இந்நிலையில், ஆரவ், இப்படத்தில் உள்ள தனது பகுதிகளுக்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார்.

Aarav and Ramya Pandian are the parents of a 12-year-old girl

மீண்டும் ‘பொன்னியின் செல்வன் 1’ ரிலீஸ் செய்யும் மணிரத்னம்

மீண்டும் ‘பொன்னியின் செல்வன் 1’ ரிலீஸ் செய்யும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன்’ சோழப் பேரரசின் எழுச்சியை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்று காவிய நாடகம்.

விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, அஷ்வின், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தை அதன் தொடர்ச்சி வெளியாவதற்கு முன் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் ஒரு சில திரையரங்குகளில் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 ஐ வெளியிட திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் கூறினார்.

Mani Ratnam to re-release ‘Ponniin Selvan 1’

தற்கொலை எண்ணத்தை மாற்ற ஏப்ரல் 7 முதல் ‘யோசி’

தற்கொலை எண்ணத்தை மாற்ற ஏப்ரல் 7 முதல் ‘யோசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி’. நாளை (ஏப்-7) இந்தப்படம் வெளியாகிறது.

இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார்.

பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார்.

பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்திற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ஆசன காட்சிகளை ஜாக்கி ஜான்சன் வடிவமைத்துள்ளார்.

யோசி

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.

முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான்.

அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினரான அபய் சங்கர் தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவருக்காக மட்டுமல்ல, கதையால் ஈர்க்கப்பட்டும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோசி

*நடிகர்கள்* :

அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு நிறுவனம் ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்

வெளியீடு ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ் & A V I மூவி மேக்கர்ஸ்

ஸ்க்ரிப்ட் & இயக்கம் ; ஸ்டீபன் எம். ஜோசப்

இசையமைப்பாளர்கள்: ராபின் ராஜ்சேகர், கே குமார், வி. அருண், ஏ.எஸ்.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ராக்சகன், வி. அருண்

இசை உரிமைகள்: MRT இசை

பின்னணி இசை: பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி)

BGM அசோசியேட் ; ஏ.எஸ். விஜய்

ஒளிப்பதிவு : ஆறுமுகம்

ஆக்சன் இயக்குனர்: ஜாக்கி ஜான்சன்

இரண்டாவது யூனிட் கேமராமேன்: பெரியசாமி & ஆனந்த் கிருஷ்ணா

நடனம்: ஜெய் & டயானா

படத்தொகுப்பு: ரோஷன் பிரதாப் ஜி – ரதீஷ் மோகனன்

ஆடை: டயானா

ஒப்பனை: கலைவாணி

PRO: A.ஜான்

சுவரொட்டி வடிவமைப்பு: நௌஃபல் குட்டிபென்சில்

தலைப்பு வடிவமைப்பு: ரிதன் விவேக், பிரம்மன்

யோசி

yosi movie release in april 7

More Articles
Follows