தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி வெளியானது.
இது நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பிரிகிடா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ஒரு நல்ல படைப்பை கொடுக்கும்போது அதில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் தேவையா ? என்று நம் FILMISTREET விமர்சனத்தில் தெரிவித்திருந்தோம்.
ரிலீஸ் ஆன பின்னும் இந்த படத்தை பிரமோட் செய்யும் பணியில் பார்த்திபன் ப்ரீகிடா உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் முக்கியமான வீதிகளில் தங்கள் கார்களில் நின்றபடியே இந்த படத்தை பற்றி இவர்கள் பேசும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.
இதனிடையில்ஒரு பேட்டியில் நடிகை பிரகிடா… ”இரவின் நிழல் படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை.
நாயகனின் வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டுமே நடந்துள்ளது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும்.
குடிசைவாழ் பகுதிக்குச் சென்றால், அந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். அவர்கள் அப்படிதான் பேசுவார்கள் அதை சினிமாவுக்காக “மாற்ற முடியாது” எனப் பேசியிருந்தார்.
பிரிகிடாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…
”நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்.
ஒரு இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறி புரிந்துக் கொள்ளப்பட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
My hearty sorry for telling those words!
I just tried to convey that… As the location changes, the language also changes in iravin nizhal film.I took a wrong example which I’m feeling so bad for saying that!
#acceptmyappologies.
Just a normal girl who’s trying to acheive infilm.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!
இவ்வாறு பார்த்திபனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Slum people.. Bad words.. Can’t be changed for cinema.; Parthiban-Brigida apologized