ரெமோ படத்தின் பெயர் காரணம் என்ன தெரியுமா.?

ரெமோ படத்தின் பெயர் காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remoபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களின் சிங்கிள் ட்ராக்குக்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு ரெமோ எனப் பெயரிட காரணம் என்ன? என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது ரெங்கராஜன் என்கிற மோகனா என்பதன் சுருக்கமே ரெமோ என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க ஐடியா தரும் உதயநிதி

தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க ஐடியா தரும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udayanithi stalin stills

வரிவிலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாராகும் தமிழ் படங்களுக்கு தமிழக அரசு அளித்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் வரிவிலக்கை ஈசியாக பெற ஒரு ஐடியாவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர்.

அதில்… வரிவிலக்கு வேண்டுமென்றால் உங்கள் படங்களின் சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு கொடுத்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

ஜாஸ் சினிமாஸ் தமிழக அரசியல் பிரமுகரின் நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே.

சிவாஜிக்கு பிறகு கமல்ஹாசனுக்கு கிடைத்த பெருமை

சிவாஜிக்கு பிறகு கமல்ஹாசனுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji ganesan kamal hassanதிரைப்படத் துறையில் கமல்ஹாசனின் சேவையைப் பாராட்டி, பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் செவாலியே விருதை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த விருதை பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 3 முறை பெற்றுள்ளவர் கமல்ஹாசன்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கமல்.

இவை மட்டுமில்லாமல் சினிமாவின் அனைத்து துறைகளிலும் கமல் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் கமல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவுக்கு கை கொடுப்பாரா சூப்பர் ஸ்டார்.?

ஆர்யாவுக்கு கை கொடுப்பாரா சூப்பர் ஸ்டார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya stillsஅட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த படங்கள் பெரியளவில் கைகொடுக்கவில்லை.

எனவே தற்போது கவனமுடன் தன் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

மஞ்சப்பை’ இயக்குனர் ராகவனின் ‘கடம்பன்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.

அதன்பின்னர் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறாராம் ஆர்யா.

இதில் மம்மூட்டியின் மகளாக சாரா நடிக்க, ‘ஆகஸ்ட் சினிமா’ என்ற நிறுவனம் தயாரிகிறது.

இந்த நிறுவனத்தில் சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன், ஆர்யா, பிரித்விராஜ் ஆகியோர் பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிவகார்த்திகேயனின் நட்பே எனக்கு விருதுதான்.’- சதீஷ் பெருமிதம்

‘சிவகார்த்திகேயனின் நட்பே எனக்கு விருதுதான்.’- சதீஷ் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan sathishசிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சினிமாவைத் தாண்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் சதீஷ்க்கு விருது கிடைத்துள்ளது. அதனை சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து சதீஷ் கூறியதாவது…

“உன் நட்பே எனக்கு கிடைத்த விருதுதான். இன்று உன் கையால் வாங்கும் விருது அதைவிட மகிழ்ச்சி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்.. “இது உலக மகா நடிப்புடா சாமி என கிண்டலடித்துள்ளார்.

அதையும் விடாத சதீஷ்… “அப்போ இந்த நடிப்புக்கும் ஒரு விருது கொடுங்கன்னு” என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யாவுடன் மோத புதிய வில்லனை கொண்டு வந்த ஹரி

சூர்யாவுடன் மோத புதிய வில்லனை கொண்டு வந்த ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thakur Anoop Singh as villain in suriyas singam 3

ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய வில்லனை தமிழுக்கு இறக்குமதி செய்துள்ளார் ஹரி.

தாகூர் அனுப் சிங் என்பவரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இவர் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமில்லை. மாடலாகவும் பைலட்டாகவும் பணிபுரிந்துள்ளார்.

இவை மட்டுமின்றி நிறைய சோப் விளம்பரங்கள் மற்றும் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எஸ் 3 படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு சூர்யாவுடன் வில்லனாக மோதுகிறார்.

 

More Articles
Follows