கொஞ்சம் கூட ஓவியா மாறல… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

கொஞ்சம் கூட ஓவியா மாறல… சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan oviya marinaபாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

இதில் இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்.

ஆனால் ஓவியாவுக்கு சொல்லும்படியான படங்களை அமையவில்லை.

ஆனால் இவர் தற்போது பங்குபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு வரலாறு காணாத புகழை தந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் முடித்துவிட்டு வெளியே வரும் நாளில் அவரின் கால்ஷீட் நிரம்பி வழிய போகிறது என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மை எனலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் ஓவியா பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என ட்விட்டரில் சிவகார்த்திகேயனிடம் ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.

மெரினா படத்தின் போதே ஜாலியாகவும் அப்பாவியாகவும் இருப்பார். இன்றும் அதே போல காணப்படுகிறார்.

ஓவியா இன்னும் மாறவே இல்லை என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan says Oviya hasnt changed a bit

சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை

சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி… மூவரையும் இணைத்த சிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Samantha Nivin Pauly join hands for Kathirs Sigaiஅவ்வை சண்முகி படத்தில் கமல், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு நடித்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் கதிரும் சிகை படத்தில் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று ஜீலை 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த டிரைலரை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதன்படி வெளியிட 3 மொழிக்கு 3 பேரை நியமித்துள்ளனர்.

எனவே தமிழுக்கு சிவகார்த்திகேயனும், தெலுங்குக்கு சமந்தாவும், மலையாளத்திற்கு நிவின்பாலியும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜகதீசன் சுபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.

Sivakarthikeyan Samantha Nivin Pauly join hands for Kathirs Sigai

sigai movie poster

ரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது முடிவு

ரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan decided to give 2 movies per yearசினிமாவில் அறிமுகமாகும் ஹீரோக்கள் வாய்ப்பு கிடைப்பதே அரிது.

அதிலும் கிடைத்துவிட்டால் வருடத்திற்கு 4-5 படங்களையாவது கொடுக்க நினைக்கின்றனர்.

ஆனால் பட வாய்ப்புகள் வாசலில் காத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் வருடத்திற்கு ஒரு படமே கொடுத்து வருகிறார்.

இது அவரது ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

எனவே அடுத்த 2018ஆம் வருடத்திலிருந்து ஆண்டுக்கு 2 படஙகளை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan decided to give 2 movies per year

தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்தநாள் ஸ்பெஷல்

தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush STARS birthday wish‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும் அதே துள்ளும் இளமையோடு இளவட்டங்களின் நாயகனாக வலம் வருபவர் தனுஷ்.

‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய இவரது ஆரம்ப கால படங்களில் இவரது அண்ணன் செல்வராகவன் மூலமாக வெற்றிக்கொடியை நாட்டினார்.

பின்னர் பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.

தமிழ் திரையுலகில் மட்டுமே தெரிந்த இவர், ‘ஆடுகளம்’ படத்தில் நடித்தற்காக தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலமானார்.

எனவே இவரின் மீது பாசமழை பொழிந்தது பாலிவுட். தற்போது தமிழ் திரையுலகம் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இனி வருடத்திற்கு ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகராக தன் திரைப்பயணத்தை தோன்றிய இவர் இன்று பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

தன் தந்தைக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு நன்றிக் கடன் என தெரிவித்து, அனைவரையும் நெகிழ வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

மேலும் இவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இவரது மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று தனுஷ் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவர் தயாரிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றுள்ளது. இவரது தயாரிப்பான ‘காக்கா முட்டை’ மற்றும் விசாரணை ஆகிய படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

இன்று தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்த நாள். அவரை ப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

dhanush bday design

அவரை பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்..

  • பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து இளம் வயதில் திரையுலகில் நுழைந்தார்.
  • இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வாராகவனின் தம்பி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி இளம்வயதிலேயே தனக்கான அடையாளத்தை வைத்திருப்பவர்.
  • செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார்.
    பூமி என்னை சுத்துதே’ என்ற பாடலை ‘எதிர்நீச்சல்’ படத்திற்காகவும் ‘கடல் ராசா நான்’ என்ற பாடலை ‘மரியான்’ படத்திற்காகவும் எழுதியுள்ளார்.
  • தற்போது தமன் இசையில் தெலுங்கில் திக்கா என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
  • செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஆசதான்…’ பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
  • இவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷ் எழுதி பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி…’ பாடல், யுட்யூப்பில் வெளியாக ஓரிரு நாட்களிலேயே உலகளவில் புகழ்பெற்றார்.
  • இந்தப் பாடல் ‘சி.என்.என்-2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.
  • துருக்கி நாட்டில் இந்த ‘கொலவெறி’ பாடலின் டியூனை ‘கோகோ கோலா’ விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
  • ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘ரஞ்சனா’ என்ற இந்திப்படத்தில் நடித்தார். இப்படம் வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூலித்தது.
  • ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் உயர்ந்தார்.
    ‘3’, ‘எதிர் நீச்சல்’, காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு உள்ளிட்ட வெற்றிப்படங்களை தன் சொந்த பேனரில் தயாரித்தார்.
  • 2011 ஆம் ஆண்டில் ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ ஆகியவற்றை வென்றார்.
  • ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகருக்கான விருது மட்டுமல்லாமல் பாடகருக்கான விருதையும் பெற்றுள்ளார். ‘மயக்கம் என்ன’ படத்தில் சிறந்த பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
  • சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
  • இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.
  • கடந்த 2016ஆம் ஆண்டில் காளீஸ்வரி என்ற ரத்த புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட 12வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றினார்.
  • தனுஷை சந்திப்பதே அவரது கடைசி ஆசை என அந்த சிறுமி கூறி நெகிழ வைத்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.
  • வருடத்திற்கு குறைந்தபட்சம் 3 படங்களையாவது ஒப்புக் கொள்கிறார்.
  • இதில் The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படம் இவரது நடிப்பில் உருவாகியுள்ளது.
  • வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.
  • மேலும் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி2 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
  • இவை தவிர எவரும் எதிர்பாராத வகையில் இவரது மாமனாரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தை ரூ 160 கோடியில் தயாரித்து வருகிறார்.
Exclusive: மக்களுக்கு என்ன செய்யலாம்..? சமுத்திரக்கனியுடன் ரஜினி ஆலோசனை

Exclusive: மக்களுக்கு என்ன செய்யலாம்..? சமுத்திரக்கனியுடன் ரஜினி ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini samuthirakani kaalaரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, நானா படேகர், ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தனுஷ் இப்படத்தை ரூ. 160 கோடியில் தயாரித்து வருகிறார். இசை சந்தோஷ் நாராயணன்.

இதன் சூட்டிங் தற்போது சென்னை, பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது.

சலவைத் தொழிலாளர்கள் ஒரு பகுதியில் வசித்து துணிகளை துவைத்து வருகின்றனர். ஆனால் அங்கே வரும் வில்லன் கும்பல் அந்த இடத்தை காலி செய்ய சொல்லி அவர்களை மிரட்டுகின்றனர்.

ஆனால் அங்குள்ள மக்கள் மறுக்கவே, நடுஇரவில் அந்த பகுதிகளை அழிக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க செட் போடப்பட்டுள்ளதாம். இதற்காக பல லட்சம் செலவழிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காலா வருகிறாராம்.

இக்காட்சியில் ரஜினி, (அவருடன் ஒரு நாய்) சமுத்திரக்கனி மற்றும் அருள்தாஸ் மற்றும் பல துணை நடிகர்கள் பங்கு பெற்று நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இவர்களுக்கு என்ன உதவி செய்யலாம்? என சமுத்திரக்கனியுடன் ஆலோசனை செய்வதாக காட்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Rajini consult with Samuthirakani for welfare of the people

விக்ரம் வேதா படம் பார்த்த சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்.?

விக்ரம் வேதா படம் பார்த்த சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Vedha mass film made with so much class says Rajinikanthகடந்த வாரம் ஜீலை 21ஆம் தேதி வெளியான படம் விக்ரம் வேதா.

புஷ்கர், காயத்ரி இருவரும் இணைந்து இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பாராட்டு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையறிந்த ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க விரும்பி, பார்த்துள்ளார்.

படம் செம மாஸ். மாஸ் மட்டுமல்ல படம் கிளாஸ் ஆகவுள்ளது என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு தங்களுக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vikram Vedha mass film made with so much class says Rajinikanth

 

More Articles
Follows