தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், ஹன்சிகா மற்றும் சிவகார்த்திகேயன் மதுரை சென்றனர்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
தாக்கியவர்கள் கமல் ரசிகர்கள் என அப்போது சொல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று தந்தி டிவியின் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
அப்போது அந்த தாக்குதல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது…
“என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்திருந்தால் அவர்களை போலீசார் அரெஸ்ட் செய்திருப்பார்கள்.
இதனால் அவர்களது வாழ்க்கையும் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கும்.
அதனால்தான் நான் கம்ப்ளைண்ட் பண்ணல.” என்றார்.