தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
‘பராசக்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்தவர்.
வாழ்ந்த காலம் வரை நடிப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரை பெற்றவர் சிவாஜி.
ரஜினியுடன் படிக்காதவன் & படையப்பா கமலுடன் தேவர் மகன் விஜய்யுடன் ஒன்ஸ்மோர் என இன்றைய முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார் சிவாஜி. ஆனால் சினிமா கை கொடுத்தது போல அவருக்கு அரசியல் கை கொடுக்கவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சியிலும் பொறுப்பு வகித்தார் சிவாஜி கணேசன்.
இவரின் மகன் பிரபுவும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். மற்றொரு மகன் ராம்குமார் சில படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்டோரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சிவாஜி மறைவுக்கு முன்னரும் மறைவுக்கு பின்னரும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பல படங்களை ராம்குமார் மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
அவர் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோது தமிழகத்தின் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார்.
இந்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 300க்கு கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அவரது வாரிசுகள் மகன்கள் ராம்குமார் பிரபு மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய 4 பேரும் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களுக்கு தெரியாமல் பிரபு & ராம்குமார் இருவரும் தங்களது தந்தையின் சில சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்களில் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…
” தங்களது தந்தை தனது சொத்துக்கள் குறித்து எவ்வித உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயாரித்து எங்களை ஏமாற்றிவிட்டனர்.
மேலும் எங்களில் தாய் வழி சொத்துக்களிலும் எங்களுக்கு பங்கு தரவில்லை.
அப்பா சேர்த்து வைத்த 10 கோடி மதிப்புள்ள சுமார் 1000 சவரன் தஙகம் வெள்ளி மற்றும் வைரம் உள்ளிட்ட பொருட்களை கூட தராமல் ஏமாற்றிவிட்டனர்.
அதேபோல் கோபலபுரத்தில் உள்ள வீட்டை 5 கோடிக்கு விற்றுவிட்டனர். ராயப்பேட்டையில் உள்ள 4 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தில் கூட எங்களுக்கு பங்கு தருவதில்லை.
கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை இருப்பதால், நீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாகபிரிவினை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sivaji Ganesan daughters filed a petition against Prabhu and Ram Kumar