தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.
இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.
இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 90s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.
தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.
அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.
ரஜினியை சந்தித்து அவரின் மற்றொரு சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.
இதனையறிந்த ரஜினி.. “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று டிசம்பர் 18ஆம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது மனைவி லதாவை சந்தித்துள்ளார்.
படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை போலவே உடையணிந்து தனது நண்பருடன் சென்று சந்தித்துள்ளார் ரஞ்சித்.
அப்போது ரஜினியின் பெற்றோர் உருவ சிலையை (தானே வடிவமைத்த) பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் வடிவமைத்த ஜெயிலர் பட ரஜினி சிலையையும் கொடுத்துள்ளார்.
இதனை பெற்றுக் கொண்ட லதா ரஜினிகாந்த்.. “விரைவில் தலைவர் ரஜினி உங்களை சந்திப்பார். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்றும் உங்கள் தொழிலுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் செய்து தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார் லதா.
——-
தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini