படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.

இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.

இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 90s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.

ரஜினியை சந்தித்து அவரின் மற்றொரு சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

இதனையறிந்த ரஜினி.. “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று டிசம்பர் 18ஆம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது மனைவி லதாவை சந்தித்துள்ளார்.

படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை போலவே உடையணிந்து தனது நண்பருடன் சென்று சந்தித்துள்ளார் ரஞ்சித்.

அப்போது ரஜினியின் பெற்றோர் உருவ சிலையை (தானே வடிவமைத்த) பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் வடிவமைத்த ஜெயிலர் பட ரஜினி சிலையையும் கொடுத்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட லதா ரஜினிகாந்த்.. “விரைவில் தலைவர் ரஜினி உங்களை சந்திப்பார். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்றும் உங்கள் தொழிலுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் செய்து தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார் லதா.

——-

தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini

‘துணிவு’ படத்தின் சமீபத்திய சர்ச்சை குறித்து மஞ்சு வாரியர் விளக்கம்

‘துணிவு’ படத்தின் சமீபத்திய சர்ச்சை குறித்து மஞ்சு வாரியர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சு வாரியரும் வைஷாக் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இணைந்து “காசேதான் கடவுளா” பாடலை பாடியுள்ளார்.

அவரது குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பாடல் முழுவதும் வைஷாகின் குரல் மட்டுமே கேட்கப்படுவதால் அவரது குரல் கேட்கவில்லை.

மஞ்சுவின் குரல் காணாமல் போனதால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

காசேதான் கடவுளின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எனது குரல் கேட்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம், இது வீடியோ பதிப்பிற்காக பதிவு செய்யப்பட்டது.

வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன் என பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்காக களம் இறங்கிய ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் ராஜு ஜெயமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜுவும் இதையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி.? பாரத ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணையும் கமல்ஹாசன்

புதிய கூட்டணி.? பாரத ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணையும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர் தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் செய்துக் கொண்டு வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் யாத்திரையின் 100வது நாளை நிறைவு செய்தார்.

இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் தான் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது வரும் டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாரத ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அரசு எதுவும் செய்யல.. நான்தான் செலவு செய்தேன் – இளையராஜா

சிவாஜிக்கு அரசு எதுவும் செய்யல.. நான்தான் செலவு செய்தேன் – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முனைவர் கா. வெ. சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்னும் நூல்
வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 18ல் நடைபெற்றது.

இதற்கான விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிட்டேஜ்ஜில் நடைபெற்றது.

சிவாஜி பெருமைகளை சொல்லும் இந்த புத்தகம் 1600 பக்கங்களை கொண்டது.

இந்த புத்தகத்தை இயக்குநர்
பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இந்த நிகழ்வில் வெளியிட்டார்.

சிவாஜி பற்றி உருக்கமாக இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…

“தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை உட்கார வைத்து ஒருநாள் முழுவதும் சிவாஜியை பற்றி பேச
வேண்டும் என்பது எனது ஆசை.

சிவாஜியிடம் இருந்து எல்லாரும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நேரம் தவறாமை.

அவருடன் பேசுவதற்கு, உறவாடுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

நாங்கள் வியர்ந்து பார்த்த மனிதர் சிவாஜி. என்னை செல்லமாக ராசா என்றுமான் அழைப்பார்.

அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும் போது..’உள்ளே வரலாமா.?’ என என்னிடம் சிவாஜி அனுமதி கேட்டார். எனக்கு அப்போது கண்ணீரே வந்து விட்டது.

தேவர் மகன் பாடல் ரெக்கார்டிங்கின்போது, நான் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு அவர் முத்தம் கொடுத்தார்.

பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார் சிவாஜி என ஒருமுறை கவிஞர் வாலி சொன்னார். அந்த போட்டோ என்னிடம் பத்திரமாக உள்ளது.

ஒருநாள்.. சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என என்னிடம் நிதிக்காக வந்தார் இயக்குநர் எஸ்.பி முத்துராமன்.

குதிரையில் சிவாஜி இருப்பது
போல் ஒரு வெள்ளி சிலையை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்றார்.

அந்த பணம் முழுவதையும் நான் கொடுத்து விடுகிறேன் என்றேன். நான் சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை.

அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அரசும் திரை உலகமும் எதுவும் செய்யவில்லை.

தனிப்பட்ட முறையில் இளையராஜா நான் தான் செய்தேன்” என்று பேசினார் இளையராஜா.

இந்த விழாவில் இளையராஜா, பாரதிராஜா, ராம்குமார், பிரபு விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம், பாக்யராஜ், பி வாசு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிக் பாஸ்’ பிரபலத்துக்கு அஜித் அளித்த அருமையான பரிசு – வைரலாகும் புகைப்படங்கள்

‘பிக் பாஸ்’ பிரபலத்துக்கு அஜித் அளித்த அருமையான பரிசு – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் 5’ புகழ் நடிகர் சிபி புவனா சந்திரன் மிகவும் மதிப்புமிக்க பரிசைப் பெற்ற ஒரு அதிர்ஷ்டசாலி.

‘துணிவு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பிற்கு அஜித் அணிந்திருந்த ஸ்டைலிஷ் கண்ணாடியை அஜீத் தனக்கு வழங்கியதாக அவர் பகிர்ந்துள்ளார்.

“இந்த விலைமதிப்பற்ற நினைவுகளை எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.

#காசேத்தான்கடவுலடா பாடல் படப்பிடிப்பின் போது #அஜித்குமார் சாரின் பரிசு” என்று சிபி பதிவிட்டுள்ளார் .

‘துணிவு’ படத்தில் சக ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான பாவ்னி மற்றும் அமீர் ஆகியோருடன் சிபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

More Articles
Follows