தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் சிம்பு.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா வருகிற நவம்பரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் தனுஷின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்துள்ளார்.
“தனுஷ் பெரிய உயரத்துக்கு போனால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக பார்க்கிறேனா? என்பதுதான் எனக்கு முக்கியம்.
அவர் என்னைவிட பெரிய ஆளாக வளர்ந்தால், நல்ல விஷயம்தானே.
அவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சகநடிகர். அவர் நல்ல உயரத்திற்கு போவதில் என்ன தவறு உள்ளது” என்றார்.
மற்றொரு பேட்டியில் சிவகார்த்திகேயனின் கண்ணீர் பிரச்சினைக்கு ஆதரவு அளித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு…
“என்னுடைய வாலு படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதுபோல் பீப் பாடல் பிரச்சினையும் பெரியளவில் உருவெடுத்தது.
அந்த சமயத்தில் எனக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
என் நிலைமை சிவகார்த்திகேயனுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்தேன்” என தெரிவித்துள்ளார்.