ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்

ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj in rangaநடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்” என்றார்.

படத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர். “திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், ‘ரங்கா’ படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்” என்றார்.

சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாராவின் ஐரா படபிடிப்பு நிறைவு

நயன்தாராவின் ஐரா படபிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

airaaஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே நயன்தாராவின் ‘ஐரா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. நயன்தாராவின் இரட்டை கதாபாத்திரங்களை பார்க்கும் போது ஆர்வம் மிகவும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்னவென்பதை பற்றி நிறைய வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது.

“நயன்தாரா மேடம் உடன் பணிபுரிவது எப்போதுமே எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் ஒரு மென்மையான அனுபவம், குறிப்பாக எனக்கு. மேலும், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான அறம் படத்தில் இருந்து ஐராவில் இன்னும் பெருகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ஐராவிற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில், அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நட்சத்திரமாக இருந்தாலும், தோற்றத்தை மட்டும் பாராமல், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் அவரது உழைப்பு தான் தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கியிருக்கிறது” என்றார் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ்.

இயக்குனர் கேஎம் சர்ஜூன் பற்றி அவர் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாரா மேடமிற்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார். எனெனில் இது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் திரைப்படம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன கலந்துரையாடினார்களோ அதை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளனர்.

ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘அவள்’ பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் மற்றும் இயக்கம் கே. எம் சர்ஜூன்.

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் 3D அடல்ட் படம்

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் 3D அடல்ட் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and yaashikaதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

“இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான்.

வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா. அவர் தொடர்ந்து கூறும்போது, “சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

2019 புத்தாண்டுக்கு சிம்பு-ஓவியா தரும் பீர் & பிரியாணி விருந்து

2019 புத்தாண்டுக்கு சிம்பு-ஓவியா தரும் பீர் & பிரியாணி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and oviyaஓவியா ஹீரோயினாக நடிக்கும் 90ml படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து ‘பீர் அண்ட் பிரியாணி’ என்கிற பாடல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு சிம்பு & ஓவியா ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ரஜினி ரசிகர்கள் படைத்த சாதனையை காலி செய்த அஜித் ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள் படைத்த சாதனையை காலி செய்த அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and rajiniரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ & அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் ஜனவரி 19ல் வெளியாகிறது.

எனவே இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் மோதலை தொடங்கியுள்ளனர்.

இந்திலையில் ‘பேட்ட’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது.

ஆனால், நேற்று (டிசம்பர் 30) வெளியிடப்பட்ட ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 9 மணி நேரத்துக்குள்ளாகவே 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இதனை சத்யஜோதி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தென்னிந்திய மொழி படங்களின் ட்ரெய்லர்களில் குறைவான நேரத்தில், 1 கோடி பார்வைகளை கடந்த முதல் படம் ‘விஸ்வாசம்’ என்ற இமாலய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

மேலும், ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லருக்கு 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியா திருமணத்திற்கு ஓகே சொன்ன விஷால். அனிஷாவை மணக்கிறார்

ஒரு வழியா திருமணத்திற்கு ஓகே சொன்ன விஷால். அனிஷாவை மணக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalஆக்சன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால்.

திடீரென ‘செல்லமே’ பட மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தற்போது 25 படங்களில் நாயகனாக நடித்து முடித்து விட்டார்.

விரைவில் அவரது நடிப்பில் அயோக்யா என்ற படம் ரிலீசாகவுள்ளது.

தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்தார்.

இதனிடையில் லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் எனத் தெரிவித்து வந்தார்.

எனவே அவர் நடிகை வரலட்சுமியாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர் தன் தோழி என்றார்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என தெரிகிறது.

இதனால், விஷாலுக்கு பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

More Articles
Follows