‘ஜெயிலர்-க்கு பிறகு மீண்டும் தமிழ் இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்

‘ஜெயிலர்-க்கு பிறகு மீண்டும் தமிழ் இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் தற்போது ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்

இதனையடுத்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.

‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது.

‘விக்ரம் வேதா’ மற்றும் ‘கைதி’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள டாக்டர் சிவராஜ் குமாரின் கான்செப்ட் போஸ்டர் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் என்பது அறிய முடிகிறது.

சிவராஜ் குமாரின் கெட்டப்பும் போஸ்டர் வடிவமைப்பும் படம் பற்றிய ஆர்வத்தை உருவாக்குகிறது.

தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: டாக்டர் சிவராஜ் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: கார்த்திக் அத்வைத்
தயாரிப்பாளர்: சுதீர் சந்திர பாதிரி
பேனர்: எஸ் சி எஃப் சி (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி)
இசை: சாம் சிஎஸ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Shivanna signed new film with Tamil director Karthik Adwaith

இது ‘கொலை’ அல்ல; கலை.; விஜய் ஆண்டனி படத்திற்கு தாணு வாழ்த்து

இது ‘கொலை’ அல்ல; கலை.; விஜய் ஆண்டனி படத்திற்கு தாணு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொலை’.

இந்த படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

ஒளிப்பதிவாளர் குமார் பேசியதாவது…

“நான் முதலில் வேலை பார்த்த படக்குழுவுடன் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேலை பார்க்கிறேன். படத்தில் உள்ள ஏழு தயாரிப்பாளர்களும் ஒற்றுமையுடன் ஒரே சீராக பணி புரிந்துள்ளனர்.

அதனை இயக்குநர் பாலாஜி குமார், நடிகர் விஜய் ஆண்டனி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர். படத்தை பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்”.

எடிட்டர் செல்வா பேசியதாவது…

“இந்தப் படத்தில் நான் உள்ளே வர காரணமாக இருந்த இசையமைப்பாளர் கிரீஷ் மற்றும் சவுண்ட் டிசைனர் விஜய் ரத்தினம் இவர்களுக்கு நன்றி. விஜய் ஆண்டனி சாரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பிடித்துள்ளது. உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் சசி பேசியதாவது…

“பாலாஜி ஒரு திறமையான இயக்குநர். டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியின் கரியரில் இது முக்கியமான படமாக அமையும்”.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது…

“இது என்னுடைய படம் போன்ற ஒரு உணர்வு உள்ளது. படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்”.

கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது…

“சிறப்பான சூழலாக இன்று அமைந்துள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. இது ‘கொலை’ அல்ல; கலை. அனைவருக்கும் வாழ்த்துகள்”. என்றார்.

சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது…

“சஸ்பென்ஸ் திரில்லர் வகைகளில் இது வித்தியாசமானதாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழ்த்துகள்”.

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது…

”விஜய் ஆண்டனி எனக்கு சகோதரன் போன்றவர். மிகக் கடினமான உழைப்பாளி. அதனால்தான் இந்த வெற்றி அவருக்கு கை கூடியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு ஜானரை முயற்சி செய்து வருகிறார். படத்திற்கு வாழ்த்துகள்”

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது…

“இது ஒரு தப்பான ‘கொலை’ அல்ல; சரியான ‘கொலை’. தயாரிப்பாளராக தனஞ்செயனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். சின்ன கம்ப்ளையிண்ட் கூட இல்லாமல் படம் முடித்து கொடுத்தவர் இயக்குநர் பாலாஜி குமார். அவர் ஜெயிக்க வேண்டும்.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத சகாப்தமாக இருப்பார். இந்த ‘கொலை’யில் நியாயம் இருக்கும்”.

Kolai is not murder its art says Thanu

ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமாரை ஆசிர்வதித்த ரஜினி.; என்ன விஷயம் தெரியுமா.?

ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமாரை ஆசிர்வதித்த ரஜினி.; என்ன விஷயம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் வகையிலும், படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போலவும் வடிவமைப்பதில் வல்லவர்.

சமீபத்தில் வெளியான ருத்ரன், விடுதலை, கஸ்டடி ஆகியவை இவர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய படங்கள் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திலும் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சிவா தான் வடிவமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் விரைவில் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார் கெவின் குமார்.

கடந்த வருடம் தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ மற்றும் தற்போது தயாராகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களில் ஒருசில சண்டைக் காட்சிகளை தானே வடிவமைத்துள்ளார் கெவின் குமார்.

சண்டைக் காட்சிகளை இவர் வடிவமைத்த நேர்த்தியை பார்த்து வியந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை பாராட்டி உள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனராக வரவேண்டும் என தனது ஆசிகளையும் வழங்கியுள்ளார்.

ஸ்டன் சிவா இதுவரை பணியாற்றி வந்த முன்னணி நிறுவனங்கள் சிலவற்றில் கெவின் குமாரை ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

Rajini blesses Stun Siva son Kevin Kumar as he debut as stunt director

‘பிச்சைக்காரன் 2’க்கு பிறகு நம்பிக்கையாக சொன்னார் விஜய் ஆண்டனி – தனஞ்செயன்

‘பிச்சைக்காரன் 2’க்கு பிறகு நம்பிக்கையாக சொன்னார் விஜய் ஆண்டனி – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

‘கொலை’ திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார்.

‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி.

இயக்குநர் பாலாஜி குமார் மிகச்சிறந்த படமாக இதை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெற்றது போல இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.

ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி என நாயகிகள் இரண்டு பேருக்கும், படத்தின் தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி.

‘பிச்சைக்காரன் 2’ வெளியானதும் என்னுடைய படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும், சிறிது காத்திருங்கள் என்று விஜய் ஆண்டனி நம்பிக்கையாக சொன்னார். அவர் சொன்னது போலவே தற்பொழுது ‘கொலை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

க்ரைம் திரில்லர் உடன் சேர்ந்து படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது. படத்தின் நேரம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் தான். ஜூலை 21ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்”. என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது…

“இந்தப் படம் என் கேரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது.

இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி”.

Dhananjayan speaks about Vijay antonys 3 movies

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை செலுத்திய நடிகர் விஜய்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் ஒரு பக்கம் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக பார்க்கப்பட்டாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் ‘நா ரெடி…’ என்ற பாடலில் போதைப் பழக்கத்திற்கு ஆதரவாக பல வரிகள் இருந்தன. எனவே அந்த பாடலை பாடிய விஜய்யை பலர் கண்டித்தனர்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக வரித்துறை சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் தற்போது இவரது கார் ஒன்று போக்குவரத்து விதிகளை மீறியதாக சிக்கி ரூபாய் 500 அபராதம் கட்டியுள்ளார் நடிகர் விஜய்.

சென்னை இசிஆர் சாலை, அக்கரை பகுதி சிக்னலில் விஜய்யின் கார் நிற்காமல் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டது.

₨500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தினார் ச. ஜோசப் விஜய். இந்த ரசீது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

chennai traffic police fined actor Vijay 500 rupees

12 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காக இணையும் விஜய் – ஷங்கர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்காக இணையும் விஜய் – ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தில் தனக்கான ஷூட்டிங் காட்சிகளை விஜய் முடித்து விட்டார். இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதன் பின்னர் தளபதி 69 படத்தில் விஜய்யை அட்லீ இயக்குவார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தளபதி 70’ படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நண்பன்’ படத்தில் இயக்குனர் ஷங்கர் – நடிகர் விஜய் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய 2 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதன் பின்னர் ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக் இயக்குவார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென விஜய் படத்தை ஷங்கர் இயக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷங்கர் விஜய் இணையும் படம் அரசியல் படமாக இருக்கும் எனவும் தகவல் வந்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

2024 பாராளுமன்ற தேர்தலையும் 2026 சட்டமன்றத் தேர்தலையும் நடிகர் விஜய் குறி வைத்து தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தனக்கு ஒரு அரசியல் திரில்லர் படம் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் கருதுவதால் இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay – Shankar unites after 12 years for Political thriller

More Articles
Follows