மீண்டும் ‘மான்ஸ்டர்’ கூட்டணி.; மனுஷ்யபுத்திரன் வசனத்தில் இணைந்த செல்வராகவன் – ஐஸ்வர்யா

மீண்டும் ‘மான்ஸ்டர்’ கூட்டணி.; மனுஷ்யபுத்திரன் வசனத்தில் இணைந்த செல்வராகவன் – ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஹானா என இந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சின்ன படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை.; ‘ஒன் வே’ விழாவில் ஓபனாக பேசிய குஷ்பு

சின்ன படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை.; ‘ஒன் வே’ விழாவில் ஓபனாக பேசிய குஷ்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார்.

சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிமைத்துள்ளார். ஹஸ்வத் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 4) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பேசுகையில்…

“இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இந்த கதையை கேட்ட உடனே தயாரிக்க பிரபஞ்சன் சார் ஒப்புக்கொண்டார். அதுமட்டும் இன்றி, என்னை சுதந்திரமாக பணியாற்ற வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா சாரை தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது தான் ஆடிசன் வைத்து இசையமைப்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இசையமைப்பாளருக்கு ஆடிசன் வைத்தது நாங்களாக தான் இருப்போம்.

ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிக சிறப்பாக செய்தார். அவருடைய வேலை எங்களுக்கு பிடித்தது அதனால் அதான் அவரை இசையமைப்பாளராக்கினோம். அவரும் மிக சிறப்பாக பணியாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. இப்போது நீங்க பார்த்ததை விட பல மடங்கு படத்தில் இருக்கும். அதுமட்டும் அல்ல, ஒரு சர்பிரைஸும் படத்தில் இருக்கிறது. அதாவது சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு பான் இந்தியா படம் தான் ‘ஒன் வே’. சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. அந்த அளவுக்கு படம் இருக்கும். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம்.

இனி படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் தான் உதவ வேண்டும். படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். நன்றி.” என்றார்.

நடிகை குஷ்பு பேசுகையில்…

“இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

காரணம், என் அண்ணனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காக தான் நான் இங்கு வந்தேன்.

‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விசயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜா சாரின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது.

எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஆரா, இயக்குநர் சக்திவேல் என அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்….

“இந்த நல்ல நாளில் இப்படி ஒரு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகை குஷ்பு இங்கு வந்திருப்பது இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. நடிகை குஷ்பு என் படங்களில் நடிக்கும் போது தமிழ் சரியாக பேசாமல் தடுமாறினார்.

ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்து சில நாட்களிலேயே தமிழ் கற்றுக்கொண்டு வசனத்தை பிச்சு உதறினார். இப்போது அவர் பேசும் தமிழால் பல மேடைகள் அதிர்கிறது. அப்போது அவருடைய அண்ணன் அப்துல்லா அவருடன் இருப்பார். அப்போதே அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கும் போல, அதனால் தான் இப்போது அவர் நடிகராக மாறிவிட்டார்.” என்றார்.

இயக்குநர் அகத்தியன் பேசுகையில்…

“’ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதியாரின் பாடலை இப்படி ஒரு வடிவத்தில் கொடுக்க முடியுமா!, என்ற ஆச்சரியத்தை இசையமைப்பாளர் அஷ்வின் ஏற்படுத்தி விட்டார். வாழ்த்துகள் அஷ்வின்.

விருந்தினர்கள் சொன்னது போல் படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போதே படத்தில் வெயிட்டாக பல விஷயங்கள் இருப்பது தெரிவது உண்மை தான். ஆனால், இதை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த படம் பற்றி எனக்கு தெரியும், அப்போதே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எனக்கு தெரிந்துவிட்டது.

இயக்குநர் சக்திவேலை எனக்கு முன்பாகவே தெரியும். இந்த படத்திற்கு முன்பாக அவர் என்னிடம் ஒரு கதை சொன்னார், அந்த கதையை கேட்ட போது நான் ஆடிவிட்டேன், அப்படி ஒரு கதையாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அவர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ‘மைதானம்’ என்ற படத்தை இயக்கினார். அதில் நான் நடித்தேன், அப்போதே அவரின் திறமை எனக்கு தெரிந்தது. திரைக்கதை அமைப்பதில் சக்திவேல் திறமைசாலி, அதனால் இந்த படம் வெற்றி பெறுவதோடு மட்டும் இன்றி, தமிழ் சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்…

“சின்ன படங்களின் விழா என்றாலே நான், கே.ராஜன் சார் உள்ளிட்ட பலர் வந்துவிடுவோம். அதனாலே நான் தினமும் இன்று எதாவது நிகழ்ச்சி இருக்கிறதா? என்று கேட்பேன். காரணம், பெரிய படங்களுக்கு பலர் வருவார்கள், ஆனால் சின்ன படங்களுக்கு எங்களை போன்றவர்கள் தான் துணை நிர்பார்கள். நாங்கள் வருவது பெரிய விஷயம் இல்லை.

ஆனால், இங்கு நடிகை குஷ்பு வந்தது நிச்சயம் பெரிய விஷயம். ஆணுக்கு பெண்கள் சரிமம் என்று சொல்வார்கள், விமானம் ஓட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால், என்னை பொருத்தவரை வலிமை நிறைந்த பெண்கள் யார் என்றால், அரசியலில் ஈடுபடுபவர்கள் தான்.

ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்றவர்களை சொல்லலாம். அந்த வரிசையில் நடிகை குஷ்பு அவர்களும் வலிமை மிக்க பெண், அவரை பெண் சிங்கம் என்றும் சொல்லலாம். காரணம், அரசியலில் ஈடுபட்டு பலரை எதிர்கொண்டு வெற்றிகரமான பெண்மணியாக பயணிப்பதோடு, தமிழை சரளமாக பேசுவதும் ஒரு காரணம்.

இன்று தமிழகத்தில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் பலர் தமிழ் பேசுவதில்லை, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிக்கொள்பவர்கள் தமிழை காப்பாற்றுவதில்லை. தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு தமிழ் தேர்வு பாடமாக தான் இருக்கிறது.

அதனால், என்ன செய்கிறார்கள், தமிழை தான் வீட்டில் பேசுகிறோமே, அதற்கு பதில் இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று இந்தியை தேர்வு செய்கிறார்கள். ஆக, தமிழை காப்பாற்ற வேண்டும்..” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான பிரபஞ்சன் பேசுகையில்….

“எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்போது பல படங்கள் வெளியாகிறது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. நூற்றுக்கு ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. எங்கள் படம் வெற்றி பெறுமோ அல்லது தோல்வி அடையமோ, என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம்.

நல்ல படம் என்பதை விட மிக வித்தியாசமன ஒரு படமாகவும், இன்று சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இந்த படம் இருக்கும். உங்களிடம் கொடுத்து விட்டோம், இனி இதை நீங்கள் தான் மக்களிடம் சென்றடைய வைக்க வேண்டும். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்..

‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தோம், ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது. பலர் ஆங்கில படங்களை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இயக்குநர் சக்திவேல் தமிழ் படத்தை ஆங்கிலப்படம் போல் எடுத்திருக்கிறார்.

இதுபோன்ற சின்ன படங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும். சின்ன படங்கள் வெற்றி பெற்றால் தான் சினிமா வாழும், சினிமா தொழிலாளர்கள் வாழ்வார்கள். நாங்கள் எத்தனையோ சின்ன படங்களின் விழாவுக்கு செல்கிறோம்.

ஆனால், இந்த படம் எங்களுக்கு முழு திருப்தியளித்தது. மேடைக்காக இதை நான் சொல்லவில்லை, இந்த படத்தின் காட்சிகள் நிமிர வைக்கிறது. படத்தில் பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது.

இன்று பெரிய ஹீரோக்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு சம்பளமாகவே 70 கோடி வரை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால், அவர்களுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை புதுமுகங்களாக போடலாம் அல்லவா, அதை செய்யாமல் செலவுகளை அதிகமாக்குகிறார்கள். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை. பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் பெரிய இயக்குநர்களா?, இதுபோன்ற சின்ன படங்களை எடுத்து வெற்றி பெறுவர்கள் தான் உண்மையான இயக்குநர்கள்.

இயக்குநர் சக்திவேல் இந்த படத்தில் பல விஷயங்களை வைத்திருப்பது தெரிகிறது. சர்வதேச பிரச்சனையை கிராமத்து கதையுடன் மிக நேர்த்தியாக சேர்த்து அவர் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும். இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் விநியோகஸ்தர் மாலிக் திறமையானவர், பல படங்களை வெற்றியடைய செய்திருக்கிறார். எனவே, ஒன் வே படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் நன்றியுரை தெரிவிக்க, விழா இனிதே நிறைவடைந்தது.

Cast & crew :
Kovai sarala, Prabanjan , aara, , Abdullah , Charles Vinoth and more
Crew:
Director : M.S..Sakthivel
DOP : Muthukumaran
Editor : Saran Shanmugam
Music : Ashwin Hemanth
Sound mix : abhishek Dharshan
Di : Karthick
Stunt: Vicky
Pro: Haswath Saravanan
Production : G group productions
Producer : Rajathi pandian , Prabajan
Theatrical release : AROMAA studios & Sim cine international

திருமண செய்தியை அறிவித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.; மணமகள் யார்?

திருமண செய்தியை அறிவித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.; மணமகள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இவர் 2010-ல் ரீலீசாகி சரச்சையை ஏற்படுத்திய ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை அமலா பாலும் இதில் தான் அறிமுகமானார்.

இதன் பின்னர் ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் குவிந்தன.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ரைசாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹரிஷ் கல்யாண். இந்த படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மேலும் ‘இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.

மேலும் தான் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

மணப்பெண்ணின் பெயர் நர்மதா உதயகுமார் எனவும் இவர் ஹரிஷின் நீண்ட நாள் தோழி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Yes its official the most eligible bachelor of our film industry Actor @iamharishkalyan is going to get hitched soon… Here is the press note regarding the same #HK #HarishKalyan #harishkalyan #Narmada #HarishNarmada #HN

@devarajulu29 @DoneChannel1 https://t.co/vm8KjB0c8d

‘குளவி’ படத்தில் இணையும் RK சுரேஷ் & அமீரா வர்மா

‘குளவி’ படத்தில் இணையும் RK சுரேஷ் & அமீரா வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் C.முருகன் அன்னை K.செந்தில்குமார் இருவரும் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘குளவி’ என்று பெயரிட்டுள்ளனர்.

R.K. சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக ‘அயோத்தி’ படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல்கள் – கபிலன், மோகன்ராஜ்
எடிட்டிங் – மு. காசிவிஸ்வநாதன்.
நடனம் – ராதிகா, சக்தி ராஜு.
ஸ்டண்ட் – ஹரி முருகன், ஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – நிமல்
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – V.S.செல்வதுரை.

இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குனர்கள் A.R.முருகதாஸ் , சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் V.S.செல்வதுரை கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம்.

குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது.

நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் V.S. செல்வதுரை.

‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்; தீபாவளிக்கு இல்லையாம்.!

‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்; தீபாவளிக்கு இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோரும் நடிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பிம்பிலிக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

அக்டோபர் 24ல் தீபாவளியன்று படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வைகை புயல் நடிகர் வடிவேலு படங்களின் ரிலீஸ் அப்டேட்

வைகை புயல் நடிகர் வடிவேலு படங்களின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் வடிவேலு தற்போது ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் லாரன்ஸ் உடன் ‘சந்திரமுகி 2’, உதயநிதியுடன் ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இவை இல்லாமல் கதையின் நாயகனாக ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற வருகிறது.

இதனையடுத்து தீபாவளிக்கு பின்னர் நவம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என தகவல் வந்துள்ளன. முதலில் தியேட்டரில் வெளியாகி சில வாரங்களுக்கு பின்னர் ஓடிடி தளங்களில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vadivelu Movies Release Update

More Articles
Follows