வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி

வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

*விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது..*

வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தயாரித்ததற்கு யுவன் சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.

இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவது போல் கதையமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன். நன்றி

*இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது…*

இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பி பார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா – இளையராஜா இசையமைப்பதாக இருந்தது.

பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

மாமனிதன் பாடலின் ரீ-ரெக்கார்டிங் மற்றும் கம்போஸிங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை; நான் அழைக்கப்படவும் இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஆனால் இப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன் தான் அவர்கள் வேலை செய்வார்கள் என சொன்னார்கள்.

ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம்.

நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துகொடுத்தார்.

இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நன்றி

Seenu Ramasamy blames MaaManithan team

நான் குரு போல நடிக்க ஆசைப்பட்டேன்.; விஜய்சேதுபதி ஓபன் டாக்

நான் குரு போல நடிக்க ஆசைப்பட்டேன்.; விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

*நடிகை காயத்ரி கூறியதாவது..*

கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்த படம் ஒரு காதல் கதை. இந்த படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் சீனுராமசாமி.

இந்த படத்தில் யுவன் சார், இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் பணியாற்றியது என் பாக்கியம் நன்றி.

*நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது..*

நீங்க நடித்தால் நானும் – அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம் தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரம். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிகொண்டு வரப்படவில்லை.

இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும்.”

என்றார் விஜய்சேதுபதி.

Guru Somasundaram

I wanted to act like a guru . Vijay Sethupathi Open Talk

ரஜினி என்ற குதிரை விழும் பின்னர் எழும்.; சிம்பு பட தயாரிப்பாளரின் கிண்டல்.? கடுப்பான ரசிகர்கள்

ரஜினி என்ற குதிரை விழும் பின்னர் எழும்.; சிம்பு பட தயாரிப்பாளரின் கிண்டல்.? கடுப்பான ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியானது.

இதில் ரஜினிகாந்தின் புகைப்படம் இடம் பெறவில்லை. மாறாக ரத்தக் கறையுடன் பெரிய கத்தி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த பட நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் தொடங்கப்படவுள்ள ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியானது முதல் இந்திய அளவில் தலைவர் 169 – ஜெயிலர் போன்றவை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில்

“எத்தனை குதிரைகள் ஓடினாலும், @rajinikanth இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை.

சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும்.

வாழ்த்துகள் @Nelsondilpkumar & டீம். ⁦@sunpictures⁩ https://t.co/EmYOOqXdzd

இவ்வாறு சிம்பு நடித்த ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் எப்போதும் விழுந்ததாக சரித்திரம் கிடையாது. அவர் எல்லா தயாரிப்பாளர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர் என்று பல கண்டனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கமெண்ட்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்…

*பாபா தான் ஒரே வீழ்ச்சி. சந்திரமுகி தொடங்கி எழுச்சி தான். அவர் விழுந்து விட்டார் என்று அரசியல் & சினிமா எதிரிகள் கட்டமைக்கிறார்கள். சில ஆண்டுகளாக இந்த குதிரையின் வேகம் குறைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் ஜாக்கியே (இயக்குனர்) தவிர குதிரை இல்லை. #Jailer @rajinikanth

*1st time seeing you are supporting RajiniKanth film

*எப்போ விழுந்தோம் எழ… எதையாவது சொல்லணும் சொல்லாதிங்க..

*கொரோன நேரத்தில் அண்ணாத்த முதல் நாள் வசூல் 34 + கோடி அதனால் அவரு விழுந்ததாக வரலாறு கிடையாது , அவர் வரலாறை படைத்தவர் நாம் படிப்பவர்கள்

#SuperstarRajinikanth #Thalaivar169 #Jailer

Simbu film producer comment on Rajini’s Jailor title look

suresh kamatchi

KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் பூஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் பூஜாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ஆனால் தமிழில் அல்ல.. தெலுங்கு & கன்னட சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

பூஜா தற்போது ‘கேஜிஎப்’ பட நடிகர் யஷ் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் மூலம் முதன் முறையாக அவருக்கு ஜோடியாகி இருக்கிறார் பூஜா

இந்தப் படத்திற்கு யஷ் 19 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தை நார்தன் என்பவர் இயக்குகிறாராம். இவர் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை இயக்கியவர்.

இப்படம் தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Yash and Pooja Hegde joins for a new film

நடிகை மதுஷாலினி திடீர் திருமணம்.; கணவர் யார் தெரியுமா.?

நடிகை மதுஷாலினி திடீர் திருமணம்.; கணவர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

16 & அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மது ஷாலினி. ஆர்யாவுக்கு ஜோடியாக மது நடித்திருந்தார்.

அதன் பிறகு பல வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

அண்மையில் வெளியான ‘விசித்திரன்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சிபிராஜ் உடன் ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மதுவுக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் நேற்று (ஜூன் 16) ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது.

இவர் கோகுல், ‛‛சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

Actress Madhushalini’s sudden marriage; Do you know who the husband is.?

கவர்ச்சி காட்டி கட்டணம் வசூலிக்கும் கமல் – விக்ரம் – பிரசாந்த் பட நடிகை

கவர்ச்சி காட்டி கட்டணம் வசூலிக்கும் கமல் – விக்ரம் – பிரசாந்த் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண்.

இவர் பிரசாந்துடன் வின்னர் படத்தில் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார்.

இவர் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

எனவே கவர்ச்சியில் கலக்கி வருகிறார்

தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது பெயரில் ஒரு செயலியை உருவாக்கி அதில் தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்.

இந்தச் செயலியைப் பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் கட்டவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal – Vikram – Prasanth film actress who charges a glamorous pose

More Articles
Follows